திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3883 | இராமாநுச நூற்றந்தாதி || 107 | இன்புற்ற சீலத் திராமா னுச, என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோயுடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய
துன்புற்று வீயினும் சொல்லுவதொன்றுண்டுன் தொண்டர்கட்கே
அன்புற் றிருக்கும் படி, என்னை யாக்கியங் காட்படுத்தே | பதவுரை Show / Hideஇன்பு உற்ற, Inbu Utra - ஆநந்த பூர்ணரா யெழுந்தருளி யிருக்கிற ஸௌசீல்ய குணமுடைய சீலத்து இராமாநுசா, Seelaththu Iraamanuchaa - எம்பெருமானாரே! சொல்லுவது ஒன்று உண்டு, Solluvadhu Ondru Undu - தேவரீரிடத்தில் அடியேன் விஞ்ஞாபிக்க வேண்டியவிஷயம் ஒன்றுண்டு என்பு உற்ற நோய் உடல் தோறும், Enbu Utra Noi Udal Thoram - எலும்பிலே உறைந்து நலியக் கூடிய வியாதிகளுக்கு இருப்பிடமான சரிரங்களிலெல்லாம் பிறந்து இறந்து, Pirandhu Irandhu - பிறப்பதும் இறப்பதுமாகி எண்ண அரிய துன்பு, Enna Ariya Thunbu - எண்ண முடியாத துன்பங்களை யநுபவித்து உற்ற வீயினாம், Utra Veeyinaam - முடிந்து போனாலும் என்றும், Endrum - எல்லாக் காலங்களிலும் எவ் இடத்தும், Ev Idaththum - எல்லா விடங்களிலும் உன் தொண்டர்கட்கே, Un Thondar Kadtke - தேவரீருடைய பக்தர்கள் விஷயத்திலேயே அன்பு உற்று இருக்கும், Anbu Utra Irukkum - பக்தனாயிருக்கும் படி படி என்னை ஆக்கி, Padi Ennai Aakki - அடியேனைச் செய்தருளி அங்கு, Angu - அந்த பக்தர்களிடத்தில் ஆள் படுத்து, Aal Paduthu - (அடியேனை) ஆட்படுத்தி யருள வேணும்; |