திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3883 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3883இராமாநுச நூற்றந்தாதி || 107
இன்புற்ற சீலத் திராமா னுச, என்றும் எவ்விடத்தும் என்புற்ற நோயுடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய துன்புற்று வீயினும் சொல்லுவதொன்றுண்டுன் தொண்டர்கட்கே அன்புற் றிருக்கும் படி, என்னை யாக்கியங் காட்படுத்தே
பதவுரை Show / Hide
இன்பு உற்ற, Inbu Utra - ஆநந்த பூர்ணரா யெழுந்தருளி யிருக்கிற ஸௌசீல்ய குணமுடைய
சீலத்து இராமாநுசா, Seelaththu Iraamanuchaa - எம்பெருமானாரே!
சொல்லுவது ஒன்று உண்டு, Solluvadhu Ondru Undu - தேவரீரிடத்தில் அடியேன் விஞ்ஞாபிக்க வேண்டியவிஷயம் ஒன்றுண்டு
என்பு உற்ற நோய் உடல் தோறும், Enbu Utra Noi Udal Thoram - எலும்பிலே உறைந்து நலியக் கூடிய வியாதிகளுக்கு இருப்பிடமான சரிரங்களிலெல்லாம்
பிறந்து இறந்து, Pirandhu Irandhu - பிறப்பதும் இறப்பதுமாகி
எண்ண அரிய துன்பு, Enna Ariya Thunbu - எண்ண முடியாத துன்பங்களை யநுபவித்து
உற்ற வீயினாம், Utra Veeyinaam - முடிந்து போனாலும்
என்றும், Endrum - எல்லாக் காலங்களிலும்
எவ் இடத்தும், Ev Idaththum - எல்லா விடங்களிலும்
உன் தொண்டர்கட்கே, Un Thondar Kadtke - தேவரீருடைய பக்தர்கள் விஷயத்திலேயே
அன்பு உற்று இருக்கும், Anbu Utra Irukkum - பக்தனாயிருக்கும் படி
படி என்னை ஆக்கி, Padi Ennai Aakki - அடியேனைச் செய்தருளி
அங்கு, Angu - அந்த பக்தர்களிடத்தில்
ஆள் படுத்து, Aal Paduthu - (அடியேனை) ஆட்படுத்தி யருள வேணும்;