திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3884 | இராமாநுச நூற்றந்தாதி || 108 | அங்கயல் பாய் வயல் தென்னரங் கன், அணி ஆகமன்னும்
பங்கய மாமலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே! நந் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமா னுசனடிப் பூ மன்னவே | பதவுரை Show / Hideநெஞ்சே, Nenchae - ஓ மனமே! பக்தி எல்லாம் தங்கியது என்ன தழைத்து, Bhakti Ellam Thangiyathu Enna Thazhaithu - பக்தி யெல்லாம் நம்மிடத்திலே குடி கொண்ட தென்று சொல்லும்படியாக வீறு பெற்று, பொங்கிய கீர்த்தி இராமாநுசன் அடி பூ, Pongiya Keerthi Raamanusan Adi Poo - பரந்த புகழை யுடையரான எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகள் நம் தலைமிசையே மன்ன, Nam Thalaimisaiye Manna - நமது தலை மேலே நித்ய வாஸம் பண்ணும்படியாக, அம் கயல் பாய் வயல் தென் அரங்கன், Am Kayal Pai Vayal Then Arangan - அழகிய கயல் மீன்கள் பாய்கிற கழனிகள் சூழ்ந்த தென்னரங்கத்தில் உறையும் பெருமானுடைய அணி ஆகம் மன்னும், Ani Aagam Mannum - அழகிய திருமார்பிலே நித்ய வாஸம் பண்ணுகிறவளாய் பங்கயம் மா மலர் பாவையை, Pangayam Maa Malar Paavai - சிறந்த தாமரைப் பூவில் பிறந்த பதுமை போன்றவளான ஸ்ரீ மஹாலக்ஷ்மியை போற்றதும், Poatradhu - வாழ்த்துவோம். |