திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3884 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3884இராமாநுச நூற்றந்தாதி || 108
அங்கயல் பாய் வயல் தென்னரங் கன், அணி ஆகமன்னும் பங்கய மாமலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம் தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே! நந் தலை மிசையே பொங்கிய கீர்த்தி இராமா னுசனடிப் பூ மன்னவே
பதவுரை Show / Hide
நெஞ்சே, Nenchae - ஓ மனமே!
பக்தி எல்லாம் தங்கியது என்ன தழைத்து, Bhakti Ellam Thangiyathu Enna Thazhaithu - பக்தி யெல்லாம் நம்மிடத்திலே குடி கொண்ட தென்று சொல்லும்படியாக வீறு பெற்று,
பொங்கிய கீர்த்தி இராமாநுசன் அடி பூ, Pongiya Keerthi Raamanusan Adi Poo - பரந்த புகழை யுடையரான எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகள்
நம் தலைமிசையே மன்ன, Nam Thalaimisaiye Manna - நமது தலை மேலே நித்ய வாஸம் பண்ணும்படியாக,
அம் கயல் பாய் வயல் தென் அரங்கன், Am Kayal Pai Vayal Then Arangan - அழகிய கயல் மீன்கள் பாய்கிற கழனிகள் சூழ்ந்த தென்னரங்கத்தில் உறையும் பெருமானுடைய
அணி ஆகம் மன்னும், Ani Aagam Mannum - அழகிய திருமார்பிலே நித்ய வாஸம் பண்ணுகிறவளாய்
பங்கயம் மா மலர் பாவையை, Pangayam Maa Malar Paavai - சிறந்த தாமரைப் பூவில் பிறந்த பதுமை போன்றவளான ஸ்ரீ மஹாலக்ஷ்மியை
போற்றதும், Poatradhu - வாழ்த்துவோம்.