Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 4 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
4திருப்பல்லாண்டு || 4
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து
எங்கள் குழாம் புகுந்து
கூடு மனம் உடையீர்கள் வரம்பு ஒழி
வந்து ஒல்லைக் கூடுமினோ
நாடும் நகரமும் நன்கு அறிய நமோ
நாராயணாய என்று
பாடு மனம் உடைப் பத்தருள்ளீர் வந்து
பல்லாண்டு கூறுமினே
ஏடு, Aedu - பொல்லாங்கான
நிலத்தில், Nilathil - நிலமாகிய மயானத்தில்
இடுவதன் முன்னம், Idhuvadhan Munnam - (உங்களைச் ) சேர்ப்பதற்கு முன்
வந்து, Vandhu - (உங்கள் திரளிலிருந்து ) வந்து
எங்கள் குழாம், Engal Kuzhaam - எங்கள் கோஷ்டியிலே
புகுந்து, Pugundhu - ப்ரவேசித்து
கூடும் மனம் உடையீர்கள், Koodum Manam Udaieergal - கூடுவோம் என்னும் நினைவுள்ளவர்களாகில்
வரம்பு ஒழி வந்து, Varambu Ozi Vandhu - (ஆத்மான மாவை மட்டும் அனுபவிப்பது என்னும் ) வரம்பை விட்டு வந்து
ஒல்லை, Ollai - விரைவாக
கூடுமினோ, Koodumino - (எங்கள் கோஷ்டியில்) கூடுங்கள்
நாடும், Naadum - நாட்டுப்புறங்களிலுள்ள ஸாமாந்யரும்
நகரமும், Nagaramum - நகரத்திலுள்ள அறிவாளிகளும்
நன்கு அறிய, Nangu Ariya - நன்றாக அறியும்படி
நமோ நாராயணாய என்று, Namo Naaraayanaaya Endru - திருமந்திரத்தை அனுஸந்தித்து
பாடும், Paadum - ( ப்ரீதிக்குப் போக்கு விட்டுப் ) பாடக்கூடிய
மனம் உடை, Manam Udaie - நினைவுள்ள
பத்தர் உள்ளீர், Pathar Ullireergal - பக்தியை உடையவர்களாகில்
வந்து பல்லாண்டு கூறுமினே, Vandhu Pallaandu Kooremine - வந்து திருப்பல்லாண்டு பாடுங்கள்