| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 4 | திருப்பல்லாண்டு || 4 | ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து கூடு மனம் உடையீர்கள் வரம்பு ஒழி வந்து ஒல்லைக் கூடுமினோ நாடும் நகரமும் நன்கு அறிய நமோ நாராயணாய என்று பாடு மனம் உடைப் பத்தருள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே | ஏடு, Aedu - பொல்லாங்கான நிலத்தில், Nilathil - நிலமாகிய மயானத்தில் இடுவதன் முன்னம், Idhuvadhan Munnam - (உங்களைச் ) சேர்ப்பதற்கு முன் வந்து, Vandhu - (உங்கள் திரளிலிருந்து ) வந்து எங்கள் குழாம், Engal Kuzhaam - எங்கள் கோஷ்டியிலே புகுந்து, Pugundhu - ப்ரவேசித்து கூடும் மனம் உடையீர்கள், Koodum Manam Udaieergal - கூடுவோம் என்னும் நினைவுள்ளவர்களாகில் வரம்பு ஒழி வந்து, Varambu Ozi Vandhu - (ஆத்மான மாவை மட்டும் அனுபவிப்பது என்னும் ) வரம்பை விட்டு வந்து ஒல்லை, Ollai - விரைவாக கூடுமினோ, Koodumino - (எங்கள் கோஷ்டியில்) கூடுங்கள் நாடும், Naadum - நாட்டுப்புறங்களிலுள்ள ஸாமாந்யரும் நகரமும், Nagaramum - நகரத்திலுள்ள அறிவாளிகளும் நன்கு அறிய, Nangu Ariya - நன்றாக அறியும்படி நமோ நாராயணாய என்று, Namo Naaraayanaaya Endru - திருமந்திரத்தை அனுஸந்தித்து பாடும், Paadum - ( ப்ரீதிக்குப் போக்கு விட்டுப் ) பாடக்கூடிய மனம் உடை, Manam Udaie - நினைவுள்ள பத்தர் உள்ளீர், Pathar Ullireergal - பக்தியை உடையவர்களாகில் வந்து பல்லாண்டு கூறுமினே, Vandhu Pallaandu Kooremine - வந்து திருப்பல்லாண்டு பாடுங்கள் |