Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 463 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
463பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 1
சென்னியோங்கு தண் திருவேம்கடம் உடையாய் உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா
என்னையும் என் உடைமையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு
நின்னருளே புரிந்து இருந்தேன் இனி என் திருக் குறிப்பே -5 -4-1
சென்னி ஓங்கு, Chenni ongu - கொடு முடியானது (ஆகாசத்தளவும்) உயர்ந்திருக்கப் பெற்ற
தண், Than - குளிர்ந்த
திருவேங்கடம், Thiruvengadam - திருவேங்கட மலையை
உடையாய், Udayai - (இருப்பிடமாக) உடையவனே!
உலகு தன்னை, Ulagu thannai - உலகத்தவர்களை
வாழ, Vaazha - வாழ்விப்பதற்காக
நின்ற, Nindru - எழுந்தருளி யிராநின்ற
நம்பீ, Nambi - (கல்யாண குணங்களால்) நிறைந்தவனே!
தாமோதரா, Thamodhara - தாமோதரனே!
சதிரா, Sathira - (அடியாருடைய குற்றத்தைக் கண்ணெடுத்துப் பாராத) சதிரை யுடையவனே!
என்னையும், Yennaiyum - எனது ஆத்துமாவுக்கும்
என் உடைமையையும், En udaimaiyaiyum - என் உடைமையான சரீரத்திற்கும்
உன், Un - உன்னுடைய
சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு, Sakara pori otrik kondu - ஸுதர்சனாழ்வானுடைய திரு விலச்சினையை இடுவித்து
நின், Nin - உன்னுடைய
அருளே, Arule - கருணையே
புரிந்திருந்தேன், Purindhiruthen - (ஸ்வயம் பிரயோஜநமாக) விரும்பி யிரா நின்றேன்
இனி, Ini - இப்படியான பின்பு
திருக் குறிப்பு, Thirukkurippu - திரு வுள்ளக் கருத்து
என், En - எதுவாயிருக்கின்றது?