| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 463 | பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 1 | சென்னியோங்கு தண் திருவேம்கடம் உடையாய் உலகு தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா என்னையும் என் உடைமையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு நின்னருளே புரிந்து இருந்தேன் இனி என் திருக் குறிப்பே -5 -4-1 | சென்னி ஓங்கு, Chenni ongu - கொடு முடியானது (ஆகாசத்தளவும்) உயர்ந்திருக்கப் பெற்ற தண், Than - குளிர்ந்த திருவேங்கடம், Thiruvengadam - திருவேங்கட மலையை உடையாய், Udayai - (இருப்பிடமாக) உடையவனே! உலகு தன்னை, Ulagu thannai - உலகத்தவர்களை வாழ, Vaazha - வாழ்விப்பதற்காக நின்ற, Nindru - எழுந்தருளி யிராநின்ற நம்பீ, Nambi - (கல்யாண குணங்களால்) நிறைந்தவனே! தாமோதரா, Thamodhara - தாமோதரனே! சதிரா, Sathira - (அடியாருடைய குற்றத்தைக் கண்ணெடுத்துப் பாராத) சதிரை யுடையவனே! என்னையும், Yennaiyum - எனது ஆத்துமாவுக்கும் என் உடைமையையும், En udaimaiyaiyum - என் உடைமையான சரீரத்திற்கும் உன், Un - உன்னுடைய சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு, Sakara pori otrik kondu - ஸுதர்சனாழ்வானுடைய திரு விலச்சினையை இடுவித்து நின், Nin - உன்னுடைய அருளே, Arule - கருணையே புரிந்திருந்தேன், Purindhiruthen - (ஸ்வயம் பிரயோஜநமாக) விரும்பி யிரா நின்றேன் இனி, Ini - இப்படியான பின்பு திருக் குறிப்பு, Thirukkurippu - திரு வுள்ளக் கருத்து என், En - எதுவாயிருக்கின்றது? |