Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 463 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
463பெரியாழ்வார் திருமொழி || (5-4 சென்னியோங்கு) - எம்பெருமானே! நெடுநாளாய் உன் திறத்தில் விமுகனாய் விஷயாந் தரங்களை நச்சி அங்குமிங்கும் அலைந்து திரிந்த அடியேனை, உனது திவ்ய கல்யாண குணகணங்களைக்காட்டி வசப்படுத்திக்கொண்டு, ஆத்மாத்மீயங்களை யெல்லாம் உனக்கே சேஷப்படுத்திவிட்டு உன் அருளையே புருஷார்த்தமாகப் பிரதிபத்தி பண்ணிக் கொண்டிருக்கும் படியான நிலைமையயும் அடியேனுக்கு அமைத்தருலினாய், இதனால் உன் அபேக்ஷிதமும், தலைக்கட்டிற்று என் அபேக்ஷிதமும் தலைக்கட்டிற்று; இனிச் செய்ய வேண்டுவதொன்றில்லை; இன்னும் என் செய்ய வேணுமென்ற உன் திருவுள்ளத்தில் ஓடுகிறது என்று கேட்கிறபடி. திருவேங்கடத்துக்குத் தண்மை – ஸம்ஸார தாபங்களை ஆற்றவற்றாயிருக்கை. உடையாய்- உடையான் என்பதன் ஈறு திரிந்த விளி. வாழ – பிறவினையில் வந்த தன்வினை; ‘உலகு தன்னை’ என்பதை உருபு மயக்கமாகக் கொண்டால், உலகத்தவர்கள் வாழும்படி நின்ற நம்பீ; என்று உரைக்கலாம். தாமோதரன் -கண்ணி நுண் சிறுந்தாம்பினாற் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயனாதலால், அத்தாம்பின் தழும்பு திரு வயிற்றில் தோன்றப் பெறவனென்றபடி. சதிர் – ருஜுவாயிருக்குந் தன்மை. கீழ் திருப்பல்லாண்டில், “தீயிற்பொலிகின்ற செஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின், கோயிற் பொறியாலே யொற்றுண்டு நின்று” என்றதை-, இப் பாட்டில் மூன்றாமடியால் விவரிக்கிறார். ஆத்துமாவுக்குச் சக்கரப்பொறி யொற்றுகையாவது – அநந்யார்ஹ சேஷத்வ ஜ்ஞாநத்தைப் பிறப்பிக்கை. அது பிறந்தமை தோற்றவிறே தோளுக்குத் திருவிலச்சினை யிடுவது. ‘நின்னருளே புரிந்திருந்தேன்’ என்றது – உபாயாந்தரத்திலும் ருசி குலையப் பெற்றேன் என்றபடி. … 1
சென்னியோங்கு தண் திருவேம்கடம் உடையாய் உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா
என்னையும் என் உடைமையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு
நின்னருளே புரிந்து இருந்தேன் இனி என் திருக் குறிப்பே -5 -4-1
சென்னி ஓங்கு, Chenni ongu - கொடு முடியானது (ஆகாசத்தளவும்) உயர்ந்திருக்கப் பெற்ற
தண், Than - குளிர்ந்த
திருவேங்கடம், Thiruvengadam - திருவேங்கட மலையை
உடையாய், Udayai - (இருப்பிடமாக) உடையவனே!
உலகு தன்னை, Ulagu thannai - உலகத்தவர்களை
வாழ, Vaazha - வாழ்விப்பதற்காக
நின்ற, Nindru - எழுந்தருளி யிராநின்ற
நம்பீ, Nambi - (கல்யாண குணங்களால்) நிறைந்தவனே!
தாமோதரா, Thamodhara - தாமோதரனே!
சதிரா, Sathira - (அடியாருடைய குற்றத்தைக் கண்ணெடுத்துப் பாராத) சதிரை யுடையவனே!
என்னையும், Yennaiyum - எனது ஆத்துமாவுக்கும்
என் உடைமையையும், En udaimaiyaiyum - என் உடைமையான சரீரத்திற்கும்
உன், Un - உன்னுடைய
சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு, Sakara pori otrik kondu - ஸுதர்சனாழ்வானுடைய திரு விலச்சினையை இடுவித்து
நின், Nin - உன்னுடைய
அருளே, Arule - கருணையே
புரிந்திருந்தேன், Purindhiruthen - (ஸ்வயம் பிரயோஜநமாக) விரும்பி யிரா நின்றேன்
இனி, Ini - இப்படியான பின்பு
திருக் குறிப்பு, Thirukkurippu - திரு வுள்ளக் கருத்து
என், En - எதுவாயிருக்கின்றது?