Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 464 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
464பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 2
பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கை கொண்ட பின்
பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால்
இறவு செய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால்
அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே -5- 4-2
பறவை ஏறு, Paravai eru - பெரிய திருவடி மேல் ஏறுமவனான
பரம் புருடா, Param puruda - புருஷோத்தமனே!
நீ, Nee - (ஸர்வ ரக்ஷகனான) நீ
என்னை, Ennai - (வேறு கதி யற்ற) என்னை
கைக் கொண்ட பின், Kaikonda pin - ஆட் படுத்திக் கொண்ட பிறகு
பிறவி என்னும் கடலும், Piravi ennum kadalum - ஸம்ஸாரமாகிற ஸமுத்ரமும்
வற்றி, Vatri - வறண்டு போய் (அதனால்)
பெரும் பதம் ஆகின்றது, Perum padham agindradhu - பெரிய தரம் பெற்றதாகிறது
இறவு செய்யும், Iravu seiyum - (இவ்வாத்துமாவை) முடிக்கிற
பாவக்காடு, Pavakkaadu - பாப ஸமூஹமானது
தீக் கொளீஇ, Thee koli - நெருப்புப் பட்டு
வேகின்றது, Vegindradhu - வெந்திட்டது
அறிவை என்னும், Arivai enum - ஞானமாகிற
அமுதம் ஆறு, Amudham aaru - அம்ருத நதியானது
தலைப் பற்றி வாய்க் கொண்டது, Thalaipatri vaaikondadhu - மேன் மேலும் பெருகிச் செல்லா நின்றது