| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 464 | பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 2 | பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கை கொண்ட பின் பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால் இறவு செய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால் அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே -5- 4-2 | பறவை ஏறு, Paravai eru - பெரிய திருவடி மேல் ஏறுமவனான பரம் புருடா, Param puruda - புருஷோத்தமனே! நீ, Nee - (ஸர்வ ரக்ஷகனான) நீ என்னை, Ennai - (வேறு கதி யற்ற) என்னை கைக் கொண்ட பின், Kaikonda pin - ஆட் படுத்திக் கொண்ட பிறகு பிறவி என்னும் கடலும், Piravi ennum kadalum - ஸம்ஸாரமாகிற ஸமுத்ரமும் வற்றி, Vatri - வறண்டு போய் (அதனால்) பெரும் பதம் ஆகின்றது, Perum padham agindradhu - பெரிய தரம் பெற்றதாகிறது இறவு செய்யும், Iravu seiyum - (இவ்வாத்துமாவை) முடிக்கிற பாவக்காடு, Pavakkaadu - பாப ஸமூஹமானது தீக் கொளீஇ, Thee koli - நெருப்புப் பட்டு வேகின்றது, Vegindradhu - வெந்திட்டது அறிவை என்னும், Arivai enum - ஞானமாகிற அமுதம் ஆறு, Amudham aaru - அம்ருத நதியானது தலைப் பற்றி வாய்க் கொண்டது, Thalaipatri vaaikondadhu - மேன் மேலும் பெருகிச் செல்லா நின்றது |