| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 465 | பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 3 | எம்மனா என் குல தெய்வமே என்னுடை நாயகனே நின்னுள்ளேனாய் பெற்ற நன்மை இவ்வுலகினில் யார் பெறுவார் நம்மன் போலே வீழ்த்த முக்கும் நாட்டிலுள்ள பாவம் எலாம் சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே -5- 4-3 | எம் மனா, Em mana - எமக்குத் தலைவனே!;தாய் ; மன்னன் என் குல தெய்வமே, En kuladeivame - என் குடிக்குப் பரதேவதை யானவனே! என்னுடைய நாயகனே, Ennudaiya naayagane - எனக்கு நாதனானவனே! நின்னுளேன் ஆய், Ninnulen ai - உன் அபிமாநத்தில் ஒதுங்கினவனாய் நாட்டில் உள்ள எல்லாப் பாவங்களும், Naatil ulla ella paavangalum - உலகத்திலுள்ள எல்லாருடைய பாவங்களும்;நாடு சாஸ்திரம் என்றுமாம் சும்மெனாதே, Summenaathe - மூச்சு விடவும் மாட்டாமல் பெற்ற நன்மை, Petra nanmai - பெற்ற நன்மையை இ உலகினில், I ulaginil - இந்த உலகத்திலுள்ள ஆர் பெறுவார், Aar peruvaar - மற்று யார் தான் பெறுவர்? நம்மன் போல, Namman pol - பூத ப்ரேத பிசாசங்களைப் போல் (உருத் தெரியாமல் ஒளிந்து வந்து) வீழ்ந்து அமுக்கும், Veezhndhu amukkum - கீழே தள்ளி மேலே அமுக்கா நின்றுள்ள கை விட்டு, Kai vittu - ஸவாஸநமாக விட்டிட்டு ஓடி, Odi - ஓடிப் போய் தூறுகள், Thoorugal - புதர்களில் பாய்ந்தன, Paaindhana - ஒளிந்து கொண்டன |