| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 466 | பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 4 | கடல் கடைந்து அமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தால் போல் உடல் உருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக் கொண்டேன் கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா தடவரைத் தோள் சக்கரபாணீ சாரங்க வில் சேவகனே -5 -4-4 | தட வரை, Tada varai - பெரிய மலை போன்ற தோள், Thol - தோள்களை யுடையவனும் சக்கரபாணீ, Sakkarapani - திருவாழி யாழ்வானைத் திருக் கையிலுடையனுமானவனே! சார்ங்கம் வில், Saarngam vil - சார்ங்கத்தை வில்லாகக் கொண்ட சேவகனே, Sevakane - வீரனே! கடல், Kadal - திருப் பாற் கடலை கடைந்து, Kadainthu - (மந்தர மலையாகிற மத்தினால்) கடைந்து அமுதம் கொண்டு, Amudham kondu - (அக் கடலினின்றும்) அம்ருதத்தை யெடுத்து கலசத்தை, Kalasathai - கலசத்தில் நிறைந்த ஆ போல், Niraindha aa pol - (நீ) நிறைந்தது போல உடல் உருகி, Udal urugi - (அடியேன்)உடல் உருகப் பெற்ற வாய் திறந்து, Vaai thirandhu - வாயைத் திறந்து கொண்டு உன்னை, Unnai - (ஆராவமுதாகிய) உன்னை மடுத்து நிறைந்துக் கொண்டேன், Maduthu niraindhukonden - உட் கொண்டு தேக்கிக் கொண்டேன் கொடுமை செய்யும், Kodumai seiyum - (இனி) கொடிய தண்டங்களை நடத்துமவனான கூற்றமும், Kootramum - யமனும் என் கோல் ஆடி, En kol aadi - எனது செங்கோல் செல்லுமிடங்களில் குறுகப் பெரு, Kuruga peru - அணுக வல்லவனல்லன் |