| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 466 | பெரியாழ்வார் திருமொழி || (5-4 சென்னியோங்கு) - கடலைக் கடைந்தெடுத்த அமுதத்தைக் கலசத்தினுள் நிறைத்த வாறுபோல, உன்னை நான் என்னுள்ளே நிறைத்துக் கொண்டேன் என்கிறார் முன்னடிகளால், ஸம்ஸாரமாகிய கடலினுள் ஈச்வரனாகிற அமுதத்தைத் தேர்ந்தெடுத்து ஆத்மாவாகிற கலசத்தில் ஆழ்வார் நிறைத்துக்காண்டனரென்க. கலசம் -வடசொல்; பாத்திரமென்று பொருள் – நிறைந்தாப்போல் = நிறைத்த, ஆ, போல், எனப் பிரியும்; ஆற என்ற சொல்: ஆ எனக் குறைந்து கிடக்கிறது; ஆறு – பிரகாரம். நிறைத்த+ஆ, நிறைத்தலா எனச் சந்தியாக வேண்டுமிடத்து, அங்ஙனாகாதது, தொகுத்தல் விகாரம். (உடலுருகி இத்யாதி) பகவதநுபவாதிசயத்தினால் ஆத்துமா வெள்ளக் கேடு படாமைக்காக இட்ட கரை போன்ற சரீரமும் உருகப்பெற்றது. எனவே, இவ் வாழ்வார்க்குப் பகவத் விஷயத்திலுள்ள அவகாஹம் அற்புதமென்பது போதரும். “நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சே இடிந்து உகும்” என்று உருவற்ற நெஞ்சே உருகுகிறதென்றால் உடலுருகச் சொல்லவேணுமோ? “ஆராவமுதே! அடியேனுடலம் நின்பாலன்பாயே, நீராயலைந்து கரையவுருக்குகின்ற நெடுமாலே!” என்ற திருவாய்மொழியையுங் காண்க. ‘உடலும் நெஞ்சுமுருகப் பெற்றதாகில், பின்னை இவ் வமுதத்தைத் தேக்கிக் கொள்வது எங்ஙனமே?” என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க; ‘விட்டுசித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலன்’ என்பராதலால், அவ்வமுதம் வியாபித்த விடமெங்கும் திருவுள்ளம் வியாபிக்குமெனக் கொள்வீர் என்று பட்டர் அருளிச் செய்தனராம். (கொடுமை செய்யும் இத்தியாதி) கீழ்ப்பாட்டில், “என்னுடைய பாவங்கள் கழிந்தவளவே யன்றி, நாட்டிலுள்ளா ரெல்லாருடைய பாவங்களும் கழித்தன” என்றார்; இதில், என்னுடைய ஆணை செல்லு மிடங்களில் யமனுங்கூட அணுக வல்லவனல்லன்’ என்கிறார். ‘கூற்றமும் –குறுகப்பெறாது’ என்ன வேண்டியிருக்க அங்ஙனக் கூறாது; ‘குறுகப் பெறா’ என்க கூறியது பொருந்துமோ?” எனின்; ‘குறுகப்பெறாது’ என்பதன் கடைக் குறையாகக் கொள்க; “கூற்றமுஞ் சாரா” என்றவிடத்திற்போல. (குறுகப் பெறா -பலவின்பாலெதிர் மறைவினைமுற்று). கூற்றம் -உடலையு முயிரையும் வேறு கூறாக்குபவனென்று காரணப் பெயராம் . கோலாடி – ஆஜ்ஞை செல்லுமிடம். கோல் – செங்கோல். 4 | கடல் கடைந்து அமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தால் போல் உடல் உருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக் கொண்டேன் கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா தடவரைத் தோள் சக்கரபாணீ சாரங்க வில் சேவகனே -5 -4-4 | தட வரை, Tada varai - பெரிய மலை போன்ற தோள், Thol - தோள்களை யுடையவனும் சக்கரபாணீ, Sakkarapani - திருவாழி யாழ்வானைத் திருக் கையிலுடையனுமானவனே! சார்ங்கம் வில், Saarngam vil - சார்ங்கத்தை வில்லாகக் கொண்ட சேவகனே, Sevakane - வீரனே! கடல், Kadal - திருப் பாற் கடலை கடைந்து, Kadainthu - (மந்தர மலையாகிற மத்தினால்) கடைந்து அமுதம் கொண்டு, Amudham kondu - (அக் கடலினின்றும்) அம்ருதத்தை யெடுத்து கலசத்தை, Kalasathai - கலசத்தில் நிறைந்த ஆ போல், Niraindha aa pol - (நீ) நிறைந்தது போல உடல் உருகி, Udal urugi - (அடியேன்)உடல் உருகப் பெற்ற வாய் திறந்து, Vaai thirandhu - வாயைத் திறந்து கொண்டு உன்னை, Unnai - (ஆராவமுதாகிய) உன்னை மடுத்து நிறைந்துக் கொண்டேன், Maduthu niraindhukonden - உட் கொண்டு தேக்கிக் கொண்டேன் கொடுமை செய்யும், Kodumai seiyum - (இனி) கொடிய தண்டங்களை நடத்துமவனான கூற்றமும், Kootramum - யமனும் என் கோல் ஆடி, En kol aadi - எனது செங்கோல் செல்லுமிடங்களில் குறுகப் பெரு, Kuruga peru - அணுக வல்லவனல்லன் |