Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 466 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
466பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 4
கடல் கடைந்து அமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தால் போல்
உடல் உருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக் கொண்டேன்
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா
தடவரைத் தோள் சக்கரபாணீ சாரங்க வில் சேவகனே -5 -4-4
தட வரை, Tada varai - பெரிய மலை போன்ற
தோள், Thol - தோள்களை யுடையவனும்
சக்கரபாணீ, Sakkarapani - திருவாழி யாழ்வானைத் திருக் கையிலுடையனுமானவனே!
சார்ங்கம் வில், Saarngam vil - சார்ங்கத்தை வில்லாகக் கொண்ட
சேவகனே, Sevakane - வீரனே!
கடல், Kadal - திருப் பாற் கடலை
கடைந்து, Kadainthu - (மந்தர மலையாகிற மத்தினால்) கடைந்து
அமுதம் கொண்டு, Amudham kondu - (அக் கடலினின்றும்) அம்ருதத்தை யெடுத்து
கலசத்தை, Kalasathai - கலசத்தில்
நிறைந்த ஆ போல், Niraindha aa pol - (நீ) நிறைந்தது போல
உடல் உருகி, Udal urugi - (அடியேன்)உடல் உருகப் பெற்ற
வாய் திறந்து, Vaai thirandhu - வாயைத் திறந்து கொண்டு
உன்னை, Unnai - (ஆராவமுதாகிய) உன்னை
மடுத்து நிறைந்துக் கொண்டேன், Maduthu niraindhukonden - உட் கொண்டு தேக்கிக் கொண்டேன்
கொடுமை செய்யும், Kodumai seiyum - (இனி) கொடிய தண்டங்களை நடத்துமவனான
கூற்றமும், Kootramum - யமனும்
என் கோல் ஆடி, En kol aadi - எனது செங்கோல் செல்லுமிடங்களில்
குறுகப் பெரு, Kuruga peru - அணுக வல்லவனல்லன்