| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 467 | பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 5 | பொன்னைக் கொண்டு உரைகல் மீதே நிறம் எழ உரைத்தால் போலே உன்னைக் கொண்டு என் நாவகம் பால் மாற்றின்றி உரைத்துக் கொண்டேன் உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன் என்னப்பா என் இருடீகேசா என் உயிர் காவலனே – 5-4 -5 | என் அப்பா, En appa - எனக்குத் தந்தையானவனே! என் இருடீகேசா, En irudeekesa - எனது இந்திரியங்களை (உன் வசப்பட்டொழுகும்படி) நியமிக்க வல்லவனே! என் உயிர், En uyir - என் ஆத்மாவை காவலனே, Kaavalane - (அந்ய சேஷமாகாதபடி) காக்க வல்லவனே! பொன்னை, Ponnai - ஸுவர்ணத்தை நிறம் ஏழ, Niram ezha - நிறமறிய (நிறத்தைப் பரீஷிப்பதற்காக) உரைகல் மீது கொண்டு, Uraikal meedhu kondu - உரைக் கல்லில் இட்டு உரைத்தால் போல், Uraithaal pol - உரைப்பது போல உன்னை, Unnai - (பரம போக்யனான) உன்னை என் நா அகம் பால் கொண்டு, En na agam paal kondu - என் நாவினுட்கொண்டு மாற்று இன்றி, Maatru indri - மாற்று அழியும்படி உரைத்துக் கொண்டேன், Uraithu konden - பேசிக்கொண்டு நின்றேன் உன்னை, Unnai - (யோகி கட்கும் அரியனான) உன்னை என்னுள் , Ennul - என் நெஞ்சினுள் கொண்டு வைத்தேன், kondu veithen - அமைத்தேன் என்னையும், Ennaiyum - (நீசனான) அடியேனையும் உன்னில் இட்டேன், Unnil itten - உனக்குச் சேஷப் படுத்தினேன் |