Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 467 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
467பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 5
பொன்னைக் கொண்டு உரைகல் மீதே நிறம் எழ உரைத்தால் போலே
உன்னைக் கொண்டு என் நாவகம் பால் மாற்றின்றி உரைத்துக் கொண்டேன்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன்
என்னப்பா என் இருடீகேசா என் உயிர் காவலனே – 5-4 -5
என் அப்பா, En appa - எனக்குத் தந்தையானவனே!
என் இருடீகேசா, En irudeekesa - எனது இந்திரியங்களை (உன் வசப்பட்டொழுகும்படி) நியமிக்க வல்லவனே!
என் உயிர், En uyir - என் ஆத்மாவை
காவலனே, Kaavalane - (அந்ய சேஷமாகாதபடி) காக்க வல்லவனே!
பொன்னை, Ponnai - ஸுவர்ணத்தை
நிறம் ஏழ, Niram ezha - நிறமறிய (நிறத்தைப் பரீஷிப்பதற்காக)
உரைகல் மீது கொண்டு, Uraikal meedhu kondu - உரைக் கல்லில் இட்டு
உரைத்தால் போல், Uraithaal pol - உரைப்பது போல
உன்னை, Unnai - (பரம போக்யனான) உன்னை
என் நா அகம் பால் கொண்டு, En na agam paal kondu - என் நாவினுட்கொண்டு
மாற்று இன்றி, Maatru indri - மாற்று அழியும்படி
உரைத்துக் கொண்டேன், Uraithu konden - பேசிக்கொண்டு நின்றேன்
உன்னை, Unnai - (யோகி கட்கும் அரியனான) உன்னை
என்னுள் , Ennul - என் நெஞ்சினுள்
கொண்டு வைத்தேன், kondu veithen - அமைத்தேன்
என்னையும், Ennaiyum - (நீசனான) அடியேனையும்
உன்னில் இட்டேன், Unnil itten - உனக்குச் சேஷப் படுத்தினேன்