| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 468 | பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 6 | உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம் என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன் மன்னடங்க மழு வலம் கை கொண்ட விராம நம்பீ என்னுடை வந்து எம்பெருமான் இனி எங்கு போகின்றதே -5- 4-6 | மன், Man - (துஷ்ட) க்ஷத்திரியர்கள் அடங்க, Adanga - அழியும்படி மழு, Mazhu - மழு என்னும் ஆயுதத்தை வலம் கை கொண்ட, Valam kai konda - வலக் கையில் ஏந்தி யிரா நின்றுள்ள இராமன், Raman - பரசு ராமனாய்த் திரு வவதரித்த விராம நம்பீ, Virama nambi - குண பூர்த்தியை யுடையவனே உன்னுடைய, Unnudaiya - உன்னுடைய விக்கிரமம், Vikkiramam - வீரச் செயல்களில் ஒன்று ஒழியாமல், Ondru ozhiyaamal - ஒன்று தப்பாமல் எல்லாம், Ellaam - எல்லாவற்றையும் என்னுடைய, Ennudaiya - என்னுடைய நெஞ்சகம் பால், Nenjagam paal - நெஞ்சினுள்ளே சுவர் வழி எழுதிக் கொண்டேன், Suvar vazhi ezhuthi konden - சுவரில் சித்திர மெழுதுவது போல எழுதிக் கொண்டேன்;பிரகாசிக்கும் படி கொண்டேன் எம் பெருமான், Em perumaan - எமக்குத் தலைவனே!எனக்கு உபகாரகன் ஆனவனே (கோபமும் உத்தேச்யம் -நமது விரோதி பாஹுள்யத்தைப் போக்கி அருளியதால்) என்னிடை வந்து, Ennidai vandhu - என் பக்கலில் எழுந்தருளி இனி , Ini - இனி மேல் போகின்றது, pogindrathu - போவதானது எங்கு, engu - வேறு எவ்விடத்தைக் குறித்து? |