| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 468 | பெரியாழ்வார் திருமொழி || (5-4 சென்னியோங்கு) - கீழ்ப்பாட்டில், “உன்னைக் கொண் டென்னுள் வைத்தேன்” என்றார்; இப்பாட்டில், வைத்த ப்ரகாரத்தைச் சொல்லுகிறார். முதற் பாட்டில் “மல்லாண்ட திண்டோன் மணிவண்ணா” என்று தொடங்கினமையால், அந்த மல்ல வதம் முதலிய சிறுச் சேவகங்களை யெல்லாம் என் நெஞ்சில் நன்கு அமைத்தேன் என்கிறாரென்க. “உன்னுடைய விக்கிரமம் எல்லாம்” என்னுமளவே போதுமாயிருக்க, “ஒன்றொழியாமல்” என்று விசேஷித்துக் கூறினமைக்குக் கருத்து என்னவெனில்; வியாஸர், வான்மீகி முதலிய முனிவர்கட்கும் விஷயமாகாத விக்கிரமங்கள் தமக்கு விஷயமானபடியைக் குறித்தவாறு; கீழ் இரண்டாம் பந்தில் ஏழாந்திருமொழியில் “சீமாலிக னவனோடு தோழமைக் கொள்ளவும் வல்லாய், சாமாறவனை நீ பெண்ணிச் சக்கரத்தால் தலைகொண்டாய்” என்றருளிச் செய்த விருத்தாந்தமும், மூன்றாம்பத்தில் பத்தாந்திருமொழியில், “எல்லியம்போ தினிதிருத்த லிருந்தோ ரிடவகையில், மல்லிகைமா மாலை கொண்டங்கார்த்தது மோரடையானம்” என்றருளிச்செய்த விருத்தாந்தமும் மற்ற முனிவர்கட்கன்றி இவ்வாழ்வார் ஒருவர் தமக்கே ஞானவிஷய மாயினவாறு காண்க. விக்கிரம் – வினா : என்ற வடசொற்றிரிபு. (சுவர் வழி எழுதிக்கொண்டேன்) சுவரில் சித்திரமெழுதினால் அது கண்ணுக்குத் தோற்றுவது போல, உன் விக்கிரமங்களாகிற சித்திரங்களை எனது நெஞ்சென்னுஞ் சுவரில் அமைத்து விளக்கிக்கொண்டே னென்றபடி. ஆழ்வார் எம்பெருமானால் மயர்வற மதிநல மருளப்பெற்றமையால், அவனுடைய விக்கிரமங்க ளனைத்தையும் குறையறக்கண்டு அநுபவித்தன ரென்றுணர்க. “மண் நடுங்க” என்றும் ஓதுவர். எம்பெருமானே! நீ பரசுராமனா யவதரித்தபோது “இருபத்தோர்கா லாசுகளைகட்ட, வென்றி நீண்மழுவா” என்றபடி க்ஷத்ரிய குல மடங்கலும் பாழ்பட்டவாறு போல, உனது விக்கிரமங்களை ஸாக்ஷத்கரிக்கப்பெற்ற என்னுடைய ஊழ்வினைகளடங்கலும் பாழ்த்துப்போயின என்பது மூன்றாமடியின் உட்கருத்து. ஆழ்வார் திருவுள்ளத்தில் குடியிருந்து நாம் செய்ய வேண்டிய காரியம் செய்து தலைக்கட்டினமையால் இனி இங்கு நின்றும் பெயர்ந்து செல்வோம் என்ற எம்பெருமான் கருதியதாகக் கொண்டு, அங்ஙனம் போகவொண்ணாதென்று வளைத்துத் தடுக்கிறார். நான்காமடியால் “மன்னஞ்சு வாயிரந்தோள் மழுவில் துணிந்த மைந்தா, என்நெஞ்சத்திலிருந்து இங்கினிப் போய்ப் பிறரொருவர். என்னெஞ்சம் புக்கிருக்க வொட்டேன் வளைத்து வைத்தேன்” என்று தடுத்தாரிறே திருமங்கையாழ்வாரும். போகின்றது- தொழிற்பெயர். “ஆக, இப்பாட்டால், அவள் வந்து புகுந்த ப்ரகாரத்தையும், அவன் போனால் தாம் முடியும்படியான அவஸ்தை பிறந்தபடியையும், அவனுக்குப் போக்கின்றிக்கே நிற்கிற நிலையையும் நிர்ஹேதுகமாக விஷயிகரித்து ப்ரகாரத்தையுஞ் சொல்லுகிறது” என்ற வியாக்கியானவாக்கிய மறியத்தக்கது. 6 | உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம் என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன் மன்னடங்க மழு வலம் கை கொண்ட விராம நம்பீ என்னுடை வந்து எம்பெருமான் இனி எங்கு போகின்றதே -5- 4-6 | மன், Man - (துஷ்ட) க்ஷத்திரியர்கள் அடங்க, Adanga - அழியும்படி மழு, Mazhu - மழு என்னும் ஆயுதத்தை வலம் கை கொண்ட, Valam kai konda - வலக் கையில் ஏந்தி யிரா நின்றுள்ள இராமன், Raman - பரசு ராமனாய்த் திரு வவதரித்த விராம நம்பீ, Virama nambi - குண பூர்த்தியை யுடையவனே உன்னுடைய, Unnudaiya - உன்னுடைய விக்கிரமம், Vikkiramam - வீரச் செயல்களில் ஒன்று ஒழியாமல், Ondru ozhiyaamal - ஒன்று தப்பாமல் எல்லாம், Ellaam - எல்லாவற்றையும் என்னுடைய, Ennudaiya - என்னுடைய நெஞ்சகம் பால், Nenjagam paal - நெஞ்சினுள்ளே சுவர் வழி எழுதிக் கொண்டேன், Suvar vazhi ezhuthi konden - சுவரில் சித்திர மெழுதுவது போல எழுதிக் கொண்டேன்;பிரகாசிக்கும் படி கொண்டேன் எம் பெருமான், Em perumaan - எமக்குத் தலைவனே!எனக்கு உபகாரகன் ஆனவனே (கோபமும் உத்தேச்யம் -நமது விரோதி பாஹுள்யத்தைப் போக்கி அருளியதால்) என்னிடை வந்து, Ennidai vandhu - என் பக்கலில் எழுந்தருளி இனி , Ini - இனி மேல் போகின்றது, pogindrathu - போவதானது எங்கு, engu - வேறு எவ்விடத்தைக் குறித்து? |