| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 469 | பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 7 | பருப்பதத்து கயல் பொறித்த பாண்டியர் குல பதி போல் திருப் பொலிந்த சேவடி என் சென்னியில் மேல் பொறித்தாய் மருப்பொசித்தாய் மல்லடர்த்தாய் என்று என்று உன் வாசகமே உருப் பொலிந்த நாவினேனை யுனக்கு உரித்து ஆக்கினையே -5 -4-7 | பருப்பதத்து, Paruppadhathu - மகா மேரு பர்வதத்தில் கயல், Kayal - (தனது) மகர த்வஜத்தை பொறித்த, Poritha - நாட்டின் பாண்டியர் குல பதி போல், Pandiyar kula pathi pol - பாண்டிய வம்சத்து அரசனைப் போல் திருப் பொலிந்து, Thiru polindhu - அழகு விளங்கா நின்றுள்ள சே அடி, Se adi - செந்தாமரை மலர் போன்ற திருவடிகளை என் சென்னியின் மேல், En chenniyin mel - என் தலையின் மீது பொறித்தாய் என்று, Porithaai endru - (அடையாளமாக) வாட்டி யருளினவனே! என்றும் மருப்பு ஒசித்தாய் என்று, Maruppu osithaai endru - (குவலயாபீடத்தின்) கொம்பை முறித்தவனே என்றும் மல், Mal - மல்லரை அடர்ந்தாய் என்று, Adarndhaai endru - நிரஸித்தவனே! என்றும் உன் வாசகமே, Un vaasagame - (இவ்வாறான) உனது செயல்களுக்கு வாசகமான திரு நாமத்தின் அநு ஸந்தாநத்தினாலேயே உருப் பொலிந்த நாவினேனை, Uru polindha naavinenai - தழும்பேறின நாக்கை யுடைய அடியேனை உனக்கு, Unakku - உனக்கு உரித்து ஆக்கினையே, Uritthu aakkinaiye - அநந்யார்ஹ சேஷனாக ஆக்கிக் கொண்டாயே |