| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 470 | பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 8 | அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என் மனந்தனுள்ளே வந்து வைகி வாழ செய்தாய் எம்பிரான் நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக நினைந்து இருந்தே சிரமம் தீர்த்தேன் நேமி நெடியவனே – 5-4 -8 | நேமி, Nemi - திருவாழி யாழ்வானை யுடைய நெடியவனே, Nediyaavane - ஸர்வாதிகனே! எம் பிரான், Em piran - எனக்குப் பரமோபகராகனானவனே! அனந்தன் பாலும், Anandhan paalum - திருவனந்தாழ்வானிடத்திலும் கருடன் பாலும், Garudan paalum - பெரிய திருவடியினிடத்திலும் ஐதுநொய்தாக வைத்து, Aidhu noithaaga vaithu - (அன்பை) மிகவும் அற்பமாக வைத்து என் மனம் தன் உள்ளே, En manam than ulle - எனது ஹருதயத்தினுள்ளே வந்து வைகி, Vandhu vaigi - வந்து பொருந்தி வாழச் செய்தாய், Vaazha seidhaai - (என்னை) வாழ்வித்தருளினாய் என் உள்ளே, En ulle - (இப்படி வாழ்வித்த உன்னை)என் நெஞ்சில் நினைந்து நின்று, Ninaindhu nindru - அநுஸந்தித்துக் கொண்டு நெக்கு, Nekku - (அதனால்) நெஞ்சு சிதிலமாகப் பெற்று கண்கள் அகம்பு ஒழுக, Kangal agambu ozhuga - கண்களினின்றும் நீர் பெருகும்படி நினைத்து இருந்தே, Ninaithu irundhe - (நீ செய்த நன்றிகளை) அநுஸந்தித்துக் கொண்டே சிரமம் தீர்த்தேன், Siramam theerthen - இளைப்பாறப் பெற்றேன் |