Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 470 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
470பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 8
அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என்
மனந்தனுள்ளே வந்து வைகி வாழ செய்தாய் எம்பிரான்
நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக
நினைந்து இருந்தே சிரமம் தீர்த்தேன் நேமி நெடியவனே – 5-4 -8
நேமி, Nemi - திருவாழி யாழ்வானை யுடைய
நெடியவனே, Nediyaavane - ஸர்வாதிகனே!
எம் பிரான், Em piran - எனக்குப் பரமோபகராகனானவனே!
அனந்தன் பாலும், Anandhan paalum - திருவனந்தாழ்வானிடத்திலும்
கருடன் பாலும், Garudan paalum - பெரிய திருவடியினிடத்திலும்
ஐதுநொய்தாக வைத்து, Aidhu noithaaga vaithu - (அன்பை) மிகவும் அற்பமாக வைத்து
என் மனம் தன் உள்ளே, En manam than ulle - எனது ஹருதயத்தினுள்ளே
வந்து வைகி, Vandhu vaigi - வந்து பொருந்தி
வாழச் செய்தாய், Vaazha seidhaai - (என்னை) வாழ்வித்தருளினாய்
என் உள்ளே, En ulle - (இப்படி வாழ்வித்த உன்னை)என் நெஞ்சில்
நினைந்து நின்று, Ninaindhu nindru - அநுஸந்தித்துக் கொண்டு
நெக்கு, Nekku - (அதனால்) நெஞ்சு சிதிலமாகப் பெற்று
கண்கள் அகம்பு ஒழுக, Kangal agambu ozhuga - கண்களினின்றும் நீர் பெருகும்படி
நினைத்து இருந்தே, Ninaithu irundhe - (நீ செய்த நன்றிகளை) அநுஸந்தித்துக் கொண்டே
சிரமம் தீர்த்தேன், Siramam theerthen - இளைப்பாறப் பெற்றேன்