Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 471 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
471பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 9
பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -5- 4-9
பனி, Pani - குளிர்ந்த
கடலில், Kadalil - திருப்பாற் கடலில்
பள்ளி கோளை, Palli kolai - பள்ளி கொள்ளுதலை
பழக விட்டு, Pazhaga vittu - பழகியதாக விட்டு (மறந்து விட்டு) (பிறிவு உளவு என்று அன்றோ ஸூ கம் உள்ளது; சேர்ந்தே இருந்தால் மறதிக்கு இடம் இருக்குமே: குகன் இடம் பெருமாள்)
ஓடி வந்து, Odi vandhu - (அங்கு நின்றும்) ஓடி வந்து
என், En - என்னுடைய
மனம் கடலில், Manam kadalil - ஹ்ருதயமாகிற கடலில்
வாழ வல்ல, Vaazha valla - வாழ வல்லவனும்
மாயம் , Maayam - ஆச்சரிய சக்தியை யுடையவனும்
மணாள, Manaala - (பெரிய பிராட்டியார்க்குக்) கணவனும்
நம்பீ, Nambi - குண பூர்ணனுமான எம்பெருமானே!
தனி கடல் என்று, Thani kadal endru - ஒப்பற்ற திருப்பாற் கடல் என்றும்
தனி சுடர் என்று, Thani sudar endru - ஒப்பற்ற ஆதித்ய மண்டலமென்றும்
தனி உலகு என்று, Thani ulagu endru - ஒப்பற்ற பரம பதமென்றும் (சொல்லப்படுகிற இவை)
உனக்கு இடம் ஆய் இருக்க, Unakku idam aai irukka - உனக்கு (ஏற்ற) வாஸஸ் ஸ்தாநமாயிருக்கச் செய்தேயும் (அவற்றை உபேக்ஷித்து விட்டு)
என்னை, Ennai - (மிகவும் நீசனான) அடியேனை
உனக்கு, Unakku - உனக்கு
உரித்து ஆக்கினையே, Uritthu aakkinaiye - உரிய வாஸஸ் ஸ்தாநமாக அமைத்துக் கொண்டருளினையே! (இஃது என்ன ஸௌசீல்யம்!)