| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 471 | பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 9 | பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என் மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -5- 4-9 | பனி, Pani - குளிர்ந்த கடலில், Kadalil - திருப்பாற் கடலில் பள்ளி கோளை, Palli kolai - பள்ளி கொள்ளுதலை பழக விட்டு, Pazhaga vittu - பழகியதாக விட்டு (மறந்து விட்டு) (பிறிவு உளவு என்று அன்றோ ஸூ கம் உள்ளது; சேர்ந்தே இருந்தால் மறதிக்கு இடம் இருக்குமே: குகன் இடம் பெருமாள்) ஓடி வந்து, Odi vandhu - (அங்கு நின்றும்) ஓடி வந்து என், En - என்னுடைய மனம் கடலில், Manam kadalil - ஹ்ருதயமாகிற கடலில் வாழ வல்ல, Vaazha valla - வாழ வல்லவனும் மாயம் , Maayam - ஆச்சரிய சக்தியை யுடையவனும் மணாள, Manaala - (பெரிய பிராட்டியார்க்குக்) கணவனும் நம்பீ, Nambi - குண பூர்ணனுமான எம்பெருமானே! தனி கடல் என்று, Thani kadal endru - ஒப்பற்ற திருப்பாற் கடல் என்றும் தனி சுடர் என்று, Thani sudar endru - ஒப்பற்ற ஆதித்ய மண்டலமென்றும் தனி உலகு என்று, Thani ulagu endru - ஒப்பற்ற பரம பதமென்றும் (சொல்லப்படுகிற இவை) உனக்கு இடம் ஆய் இருக்க, Unakku idam aai irukka - உனக்கு (ஏற்ற) வாஸஸ் ஸ்தாநமாயிருக்கச் செய்தேயும் (அவற்றை உபேக்ஷித்து விட்டு) என்னை, Ennai - (மிகவும் நீசனான) அடியேனை உனக்கு, Unakku - உனக்கு உரித்து ஆக்கினையே, Uritthu aakkinaiye - உரிய வாஸஸ் ஸ்தாநமாக அமைத்துக் கொண்டருளினையே! (இஃது என்ன ஸௌசீல்யம்!) |