| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 473 | பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 11 | வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலனைக் கொழும் குளிர் முகில் வண்ணனை ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -5 -4-11 | வேயர் தங்கள், Veyar thangal - வேயர் வைதிகர்களுடைய குலத்து, Kulathu - வம்சத்து (வைதிகர் குலம்) உதித்த, udhitha - அவதரித்த விட்டு சித்தன், Vittu Chithan - பெரியாழ்வாருடைய மனத்து, Manathu - ஹ்ருதயத்தில் கோயில் கொண்ட, kovil konda - திருக் கோயில் கொண்டெழுந்தருளி யிருக்கிற கோவலனை, Kovalanai - கோபாலனும் கொழு குளிர் முகில் வண்ணனை, kozhu kulir mugil vannanai - கொழுமையும் குளிர்ச்சியும் பொருந்தி மேகம் போன்ற நிறத்தை யுடையனும் ஆயரேற்றை, Aayarerrai - இடையர்களுக்குத் தலைவனும் அமரர் கோவை, Amarr kovai - நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹனும் அந்தணர், Andhanar - சனகர் முதலிய ப்ரஹ்ம மஹரிஷிகளுக்கு அமுதத்தினை, Amudhathinai - அம்ருதம் போல் இனியதுமான எம்பெருமானை பாட வல்லார் தாம், Paada vallaar thaam - (இத் திருமொழியினால்) பாட வல்லவர்கள் சாயைப் போல, Saayai pola - நிழல் போல அணுக்கர்களே, Anukkargale - (எம்பெருமானை எப்போதும்) அணுகி இருக்கப் பெறுவர்கள் |