| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 479 | திருப்பாவை || 6 | புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்தங் கரிஎன்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய். | புள்ளும், Pullum - பறவைகளும் சிலம்பின காண், Silambina Kaan - (இரை தேடுகைக்காக எழுந்து) ஆரவாரங்கள் செய்யா நின்றன காண் புள் அரையன், Pul Araiyan - பறவைத் தலைவனான பெரிய திருவடிக்கு கோ, Ko - ஸ்வாமியான ஸர்வேஸ்வரனுடைய இல்லில், Illil - ஸந்நிதியிலே வெள்ளை, Vellai - வெண்மை நிறமுடையதும் விளி, Vili - (அனைவரையும்) அழையா நிற்பதுமான சங்கின், Sangin - சங்கினுடைய பேர் அரவம், Paer Aravam - பேரொலியையும் கேட்டிலையோ, Keatilaiyo - செவிப்படுத்துகின்றலையோ? பிள்ளாய், Pillai - (பகவத் விஷய ரஸ மறியப் பெறாத) பெண்ணெ! எழுந்திராய், Ezhundhirai - (சடக்கென) எழுந்திரு பேய் முலை நஞ்சு, Pey Mulai Nanchu - பூனையின் முலையில் (தடவிக் கிடந்த) விஷத்தை உண்டு, Undu - (அவளது ஆவியுடன் அமுது செய்து கள்ளம் சகடம், Kallam Sagadam - வஞ்சனை பொருந்திய (அஸுரா விஷ்டமான) சகடமானது கலக்கு அழிய, Kalakku Azhiya - கட்டுக் குலையும்படி கால், Kaal - திருவடியை ஒச்சி, Ochi - ஓங்கச் செய்தவனும் வெள்ளத்து, Vellathu - திருப்பாற்கடலில் அரவில், Aravil - திருவனந்தாழ்வான் மீது துயில் அமர்ந்த, Thuyil Amarndha - திருக்கண் வளர்ந்தருளின வித்தினை, Vithinai - ஐகத் காரண பூதனுமான எம்பெருமானை முனிவர்களும், Munivargalum - மநந சீலரான ரிஷிகளும் யோகிகளும், Yogigalum - யோகப் பயிற்சியில் ஊன்றினவர்களும் உள்ளத்து கொண்டு, Ullathu Kondu - (தமது) ஹ்ருதயத்தில் அமர்த்திக் கொண்டு மெள்ள எழுந்து, Mella Ezhundhu - (ஹ்ருதயஸ்தனான அவ்வெம்பெருமான் அசையாதபடி) ஸாவதாநமாக எழுந்து அரி என்ற , Ari Endra - ‘ஹரிர் ஹரிர் என்ற பேர் அரவம்,Paer Aravam - பேரொலியானது உள்ளம் புகுந்து, Ullam Pugundhu - (எமது) நெஞ்சிற் புகுந்து குளிர்ந்து, Kulirndhu - குளிர்ந்தது ஏல் ஓர் எம் பாவாய், Ael Or Em Paavay - ஏல் ஓர் எம் பாவாய் |