| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 480 | திருப்பாவை || சிலரை உணர்த்திக் கூட்டிக் கொண்டு கண்ணபிரான் பக்கற் போமவர்களன்றே இவர்கள்; நம்மைப் போலவே அனைவரும் நன்மை பெற வேணுமென்னுங் கருத்துடையோரன்றோ. பகவத் ஸம்பந்தம் மெய்யே உண்டாகில் தன் வயிற்றிற் பிறந்த ப்ரஜையினுடைய ஸம்ருத்திக்கு உகக்குமாறு போலவே அனைவருடைய ஸம்ருத்திக்கும் உகக்க வேணுமன்றே? ஆட்கொண்ட வில்லி ஜீயர் எழுந்தருளா நிற்கச் செய்தே நஞ்சீயர் தெண்டனிட்டு நிற்க, “பகவத் விஷயத்தில் ருசி நமக்கு மெய்யே பிறந்ததில்லை காணும்’ என்று ஆட் கொண்ட வில்லி ஜீயர் அருளிச் செய்ய, நஞ்சீயர், “உம்மைப்போல் ஆசார்யவான்கள் ஆரேனுமுளரோ? நீர் இங்ஙனே அருளிச்செய்வானென்?” என்று கேட்க; “பாகவதர்களின் ஸம்ருத்தியைக் கண்டு மிக உகக்கை யன்றோ பகவத் விஷயத்தில் ருசி மெய்யே பிறக்கையாவது; அஃது இல்லாமையைப் பற்றச் சொன்னேன் காணும்” என்று ஆட்கொண்ட வில்லி ஜீயர் அருளிச் செய்தார் என்ற ஐதிஹ்யம் இங்கு நினைக்கத் தக்கது– 7 | கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத் தன்கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய். | பேய் பெண்ணே, Pey Pennae - மதி கெட்ட பெண்ணே! எங்கும், Engum - எல்லா விடங்களிலும் ஆனைச் சாத்தன், Aanaich Sathan - பரத்வாஜ பக்ஷிகளானவை கலந்து, Kalandhu - (ஒன்றோடொன்று) ஸம்ஸ்லேக்ஷித்து கீசுகீசு என்று, Keesukeesu Endru - கீச்சு கீச்சு என்று பேசின, Pesina - பேசிய பேச்சு அரவம், Pechu Aravam - பேச்சினுடைய ஆரவாரத்தை கேட்டிலையோ, Keatilaiyo - (இன்னும் நீ) கேட்கவில்லையோ? வாசம், Vaasam - பரிமள வஸ்துக்களினால் நறு, Naru - மணம் கமழா நின்றுள்ள குழல், Kuzhal - கூந்தலை யுடைய ஆய்ச்சியர், Aaychiyar - இடைப் பெண்கள் காசும், Kaasum - (கழுத்தில் அணிந்துள்ள) அச்சுத் தாலியும் பிறப்பும், Pirappum - ஆமைத் தாலியும் கலகலப்பு, Kalakalappu - கலகலவென்று சப்திக்கும் படியாக கைபேர்த்து, Kaiperthu - கைகளை அசைத்து மத்தினால், Maththinaal - மத்தாலே ஓசை படுத்த, Osai Padutha - ஓசை படுத்தின தயிர் அரவம், Thayir Aravam - தயிரின் ஒலியையும் கேட்டிலையோ, Keatilaiyo - கேட்க வில்லையோ? நாயகப் பெண் பிள்ளாய், Nayakap Pen Pillai - பெண்களுக்கெல்லாம் தலைமையாயிருப்பவளே நாராயணன் மூர்த்தி கேசவனை, Naaraayanan Moorthi Kesavanai - ஸ்ரீமந் நாராயண அவதாரமான கண்ண பிரானை பாடவும், Paadavum - (நாங்கள்) பாடா நிற்கச் செய்தேயும் நீ, Nee - நீ கேட்டே, Keate - (அப் பாட்டைக்) கேட்டு வைத்தும் கிடத்தியோ, Kitathiyo - (இங்ஙனே) உறங்குவாயோ? தேசம் உடையாய், Desam Udayaay - மிக்க தேஜஸ்ஸை யுடையவளே! திற, Thira - (நீயே எழுந்து வந்து கதவைத்) திற ஏல் ஓர் எம் பாவாய்!, Ael Or Em Paavay! - ஏல் ஓர் எம் பாவாய்! |