| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 493 | திருப்பாவை || கீழ்ப்பாட்டில், “தத்துவமன்று தகவு” என்று ஆய்ச்சிகள் தங்களாற்றாமையினால் வருத்தந் தோற்றச் சில குற்றங் கூறினரே யாயினும், பெருமானுடைய திருவுள்ளமறிந்து ஏற்ற அவகாசத்தில் விண்ணப்பஞ் செய்வோமென்றெண்ணி நப்பின்னை பேசாதே பள்ளி கொண்டிருந்தாள்’ அவளோட்டைக் கலவியிற் பரவசப்பட்டுள்ள கண்ண பிரானையும் “நப்பின்னைப் பிராட்டியை நோக்கி அதி க்ஷேபமாகக் கூறுகின்ற பெண்களுக்கு நாம் முகங்காட்டக் கடவோ மல்லோம்” என்று சீற்ற முற்றிருக்கக் கூடும் இவன் என்று அதிசங்கித்த ஆய்ச்சிகள், மீண்டும் அக் கண்ண பிரான்றன்னை நோக்கி, அவனுடைய பெருமைகள் பலவற்றையும் பரக்கப் பேசித் துயிலெழ வேண்டின விடத்தும் அவன் வாய் திறவாதிருக்க, இவ் வாய்ச்சிகள், “நாம் ப்ரணய ரோஷத்தினால் நப்பின்னை விஷயமாகக் கூறிய சில வார்த்தைகள் இவனுக்கு அஸஹ்யமாயின போலும்’ இனி, அவளுடைய பெருமைகளைப் பேசினோமாகில் இவனுடைய சீற்றம் ஒருவாறு தணியப் பெறும்” என நினைத்து அவளுடைய ஆத்ம குணங்களையும் தேஹ குணங்களையுங் கூறி ஏத்தி, “நங்காய்! எங்கள் மநோ ரதத்தைத் தலைக் காட்டி யருள வேணும்” என வேண்டுமாற்றாற் செல்லுகிறது, இப்பாட்டு– 20 | முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே துயில்எழாய் செப்பம் உடையாய் திறல்உடையாய் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா துயில்எழாய் செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய் திருவே துயில்எழாய் உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய் | முப்பத்து மூவர் அமரர்க்கு, muppathu moovar amararkku - முப்பத்து முக் கோடி தேவர்கட்கு முன் சென்று, mun sendru - (துன்பம் வருவதற்கு) முன்னமே எழுந்தருளி கப்பம், kappam - (அவர்களுடைய) நடுக்கத்தை தவிர்க்கும், tharikkum - நீக்கி யருள வல்ல கலியே, kaliyae - மிடுக்கை யுடைய கண்ண பிரானே! வெப்பம், veppam - (பயமாகிற) ஜ்வரத்தை கொடுக்கும், kodukkum - கொடுக்க வல்ல விமலா, vimalaa - பரி சுத்த ஸ்வபாவனே! துயில் எழாய், thuyil ezhay - படுக்கையினின்றும் எழுந்தருள் ’செப்பு அன்ன, 'seppu anna - பொற் கலசம் போன்ற மென் முலை, men mulai - விரஹம் பொறாத முலைகளையும் செம் வாய், sem vaai - சிவந்த வாயையும் சிறு மருங்குல், siru marungul - நுண்ணிதான இடையையுமுடைய நப்பின்னை நங்காய், nappinnai nangaay - நப்பின்னைப் பிராட்டியே! திருவே, thiruvae - ஸ்ரீ மஹா லக்ஷ்மியே! ’துயில் எழாய், 'thuyil ezhay - படுக்கையினின்றும் எழுந்தருள் செப்பம் உடையாய், seppam udaiyaay - (ஆஸ்ரித ரக்ஷணத்தில்) ருஜுவாயிருக்குந் தமையை யுடையவனே திறல் உடையாய், thiral udaiyaay - பகைவர் மண்ணுன்னும் படியான வலிமை யுடையவனே! செற்றார்க்கு, serrarkku - சத்துருக்களுக்கு (துயிலெழுந்த பின்பு.) உக்கமும், ukkamum - (நோன்புக்கு உபகரணமான) ஆலவட்டத்தையும் (விசிறியையும்) தட்டொளியும், tattoliyum - கண்ணாடியையும் உன் மணாளனை, un manaalanai - உனக்கு வல்லபனான கண்ணபிரானையும் தந்து, tandhu - கொடுத்து எம்மை, emmai - (விரஹத்தால் மெலிந்த) எங்களை இப்போதே, ippodae - இந்த க்ஷணத்திலேயே நீராட்டு, neeraattu - நீராட்டக் கடவாய்’ ஏல் ஓர் எம்பாவாய், ael or em paavaay - ஏல் ஓர் எம்பாவாய் |