| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 495 | திருப்பாவை || 22 | ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய் ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய் மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன் வாசற்கண் ஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலே போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய். | அம் கண் மா ஞாலத்து அரசர், am kan maa nyaalathu arasar - அழகியதாய் விசாலமாய்ப் பெரிதாயுள்ள பூமியில் (அரசாட்சி செய்த ராஜாக்கள்) அபிமான பங்கம் ஆய் வந்து, abimaana pangam aay vandhu - (தங்களுடைய) அஹங்காரமடங்கி வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே, nin pallik kattil keezhe - உன் சிங்காசனத்தின் கீழ் சங்கம் இருப்பார் போல், sangam iruppaar pol - திரள் திரளாக இருப்பது போலே வந்து, vandhu - நாங்களும் உன் இருப்பிடத்தேற விடை கொண்டு தலைப் பெய்தோம், thalai petrom - கிட்டினோம் கிங்கிணி வாய்ச் செய்த, kingini vaai seidha - கிண்கிணியின் வாய்ப் போலிரா நின்ற (பாதிவிக ஸிதமான) தாமரைப் பூ போலே, thaamarai poo polae - செந்தாமரைப் பூப்போன்ற செம் கண், sem kan - சிவந்த திருக் கண்கள் சிறுச்சிறிது, siru siridhu - கொஞ்சங்கொஞ்சமாக எம் மேல், em mel - எங்கள் மேலே விழியாவோ, vizhiyaavo - விழிக்க மாட்டாவோ? திங்களும், thingalum - சந்திரனும் ஆதித்யனும், aadityanum - ஸுர்யனும் எழுந்தால் போல், ezhundhaal pol - உதித்தாற் போல அம் கண் இரண்டும் கொண்டு, am kan irandum kondu - அழகிய திருக் கண்களிரண்டினாலும் எங்கள் மேல் நோக்குதிஏல், engal mel nokkudhiyael - எங்களைக் கடாக்ஷித்தருள் வாயாகில் எங்கள் மேல் சாபம், engal mel saabam - எங்கள் பக்கலிலுள்ள பாபம் இழிந்து, izhindhu - கழிந்துவிடும் ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavaay - ஏல் ஓர் எம்பாவாய் |