திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 5 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
5திருப்பல்லாண்டு || ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –அவதாரிகை --முற்பட அநந்ய பிரயோஜனரை அழைத்தார் கேவலரும் ஐஸ்வர்யார்த்திகளும் பிரயோஜனாந்த பரராய் இருக்கச் செய்தேயும் கேவலருடைய துர்கதியைக் கண்டு முந்துற அழைத்தார் -இப்பாட்டில் ஐஸ்வர்யார்த்திகளை-அழைக்கிறார் 5
அண்டக் குலத்துக்கு அதிபதி ஆகி அசுரர் இராக்கதரை இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த இருடிகேசன் தனக்கு தொண்டக் குலத்தில் உள்ளீர் வந்து அடிதொழுது ஆயிர நாமம் சொல்லிப் பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல் லாயிரத்தாண்டு என்மினே
பதவுரை Show / Hide
அண்டக் குலத்துக்கு, Andak Kulathukku - அண்டங்களின் ஸமூஹத்துக்கு
அதிபதி ஆகி, Adhipathi Aagi - நியமிப்பவனாகி
அசுரர், Asurar - அஸுரர்களும்
இராக்கதரை, Iraakkatharai - ராக்ஷஸர்களுமாகிற
இண்டக் குலத்தை, Indak Kulathai - நெருக்கின கூட்டத்தை
எடுத்து, Eduthu - திரட்டி
களைந்த, Kalaindha - ஒழித்த
இருடீகேசன் தனக்கு, Irudeekesan Thaankku - இந்திரியங்களுக்கு அதிபதியான எம்பெருமானுக்கு
தொண்டக் குலத்தில் உள்ளீர், Thondak Kulathil - அடிமை செய்பவர்கள் குலத்திலே
உள்ளீர், Ullireer - உள்ளவர்களான
வந்து, Vandhu - எங்கள் கோஷ்டிக்கு வந்து
அடி, Adi - அச்சுதனுடைய திருவடிகளை
தொழுது, Thozhudhu - ஸேவித்து
ஆயிர நாமம் , Ayira Naamam - அவனுடைய ஆயிரம் பெயர்களையும்
சொல்லி, solli - வாயாரச்சொல்லி
பண்டைக் குலத்தை, Pandai Kulathai - புருஷோத்தமனிடம் சென்று மற்றொரு பலனைப் பெற்று அகலுபவர்களாயிருந்த பழைய ஜன்மத்தை
தவிர்ந்து, Thavirndhu - நீக்கி
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே, Pallaandu Pallaayiraththaandu Enmine - பலகால் மங்களாசாஸனம் செய்யுங்கள்