| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 500 | திருப்பாவை || கீழ்ப்பாட்டிற் சங்குகளையும் பறைகளையும் பல்லாண்டிசைப்பாரையும் கோல விளக்கையும் கொடியையும் விதானத்தையும் அருளவேண்டுமென்று அபேக்ஷித்த ஆயர்மாதரை நோக்கிக் கண்ணபிரான், “பெண்காள்! நம்மோடு ஒத்த ஈச்வரனொருவ னுண்ணடாகிலன்றோ நம் பாஞ்சஜந்யத்தோடு ஒத்ததொரு சங்கு உண்டாவது; அன்றியும் ‘சங்கங்கள்’ என்று பல சங்குகள் வேணுமென்னா நின்றீர்கள்; ஒன்றரை தேடினோமாகிலும் பாஞ்ச ஜந்யத்தோடொத்த பல சங்குகள் கிடையாவே; நம் பாஞ்சஜந்யத்தையும், *புள்ளரையன் கோயில் வெள்ளை விளிசங்கையும், ஆநிரையினம் மீளக்குறித்த சங்கத்தையும் தருகிறேன், கொள்ளுங்கள்; இனி, ‘பறை’ என்றீர்களாகில்; நாம் உலகளந்தபோது ஜாம்பவான் நம் ஜயம் சாற்றின பறையைத் தருகிறேன்; ‘பெரும்பறை’ என்றீர்களாகில், நாம் இலங்கை பாழாளாகப் படை பொருதபோது நம் ஜயஞ்சாற்றினதொரு பறையுண்டு; அதனைத் தருகிறேன்; அதற்கு மேல் ‘சாலப்பெரும் பறை’ என்கிறீர்களாகில் மிகவும் பெரிதான பறையாவது – நாம் *பாரோர்களெல்லாம்; மகிழப் பறை கறங்கக் குடமாடுகிறபோது நம் அரையிலே கட்டியாடின தொரு பறையுண்டு; அதனைத் தருகிறேன்; கொள்ளுங்கள்; பல்லாண்டு பாடுகைக்கு உங்களுக்குப் பெரியாழ்வாருண்டு; அவரைப் போலெ ‘அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு’ என்று உங்களையும் நம்மையுஞ் சேர்த்துக் காப்பிடுகை யன்றியே “பொலிக பொலிக பொலிக!” என்று உங்களுக்கே காப்பிடும் நம்மாழ்வாரையுங் கொண்டு போங்கள்; இனி, கோல விளக்குக்காக உபயப் பிரகாசிகையான நப்பின்னையைக் கொள்ளுங்கள்; அதற்கு மேல் கொடிவேணுமாகில் “கருளக்கொடி யொன்றுடையீர்” என்று நீங்கள் சொல்லும் பெரிய திருவடியைக் கொண்டு போங்கள்; அதற்குமேல் விதானம் வேணுமாகில், நாம் மதுரையில் நின்றும் இச்சேரிக்கு வரும் போது நம்மேல் மழைத்துளி விழாதபடி தொடுத்து மேல் விதானமாய் வந்த நம் அனந்தனைக் கொண்டு போங்கள்; இவ்வளவேயன்றோ நான் உங்களுக்குச் செய்யவேண்டுவது” என்ன; இதுகேட்ட பெண்கள், “பிரானே! மார்கழி நீராடப் போம் போதைக்கு வேண்டியவை இவை; நோன்பு நோற்றுத் தலைக் கட்டின பின்பு நாங்கள் உன்னிடத்துப் பெற வேண்டிய பல பஹுமாந விசேஷங்களுள் அவற்றையும் நாங்கள் பெற்று மகிழும்படி அருள்புரிய வேணுமென்று ப்ரார்த்திக்கும் பாசுரம், இது 27 | கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப் பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாகச சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம் ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய். | கூடாரை, koodaarai - தன் அடி பணியாதவர்களை வெல்லும் சீர், vellum seer - வெல்லுகின்ற குணங்களை யுடைய கோவிந்தா, govindhaa - கண்ண பிரானே! உன் தன்னை, un thannai - உன்னை பாடி, paadi - (வாயாரப்)பாடி பறை கொண்டு, parai kondhu - (உன்னிடத்து யாம் வேண்டுகின்ற) பறையைப் பெற்று யாம் பெறு சம்மானம், yaam peru sammaanam - (பின்னும்) நங்கள் பெறும் படியான ஸம்மாநமாவது நாடு புகழும் பரிசினால், naadu pugazhum parisinaal - நாட்டார் புகழும்படியாக சூடகம், soodagam - (கையிலணியும் ஆபரணமான) சூடகங்களும் தோள் வளை, thol valai - தோள்வளைகளும் தோடு, thodu - (காதுக்கிடும் ஆபரணமான) தோடும் செவிப் பூ, sevi poo - கர்ணப் பூவும் பாடகம், paadagam - பாதகடகமும் என்றனையப் பல் கலனும், endranaiya pal kalenum - என்று சொல்லப்படும் இவ்வாபரணங்கள் போன்ற மற்றும் பல ஆபரணங்களும் (உன்னாலும் நப்பின்னைப் பிராட்டியினாலும் பூட்டப்பட) யாம் நன்றாக அணிவோம் ஆடை, aadai - சேலைகளை உடுப்போம், uduppom - (நீ உடுத்த) உடுத்துக் கொள்வோம்; அதன் பின்னே, adhan pinne - அதற்குப் பின்பு பால் சோறு, paal soru - பாற் சோறானது (க்ஷிராந்நம்) மூட, mooda - மறையும் படியாக நெய் பெய்து, nei peythu - நெய் பரிமாறி முழங்கை வழி, muzhangai vazhi - முழங்கையால் வழியும் படியாக (உண்டு) கூடி, koodi - (நீயும் நாங்களுமாகக்) கூடியிருந்து குளிர்ந்து, kulirndhu - குளிர வேணும்: ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavai - ஏல் ஓர் எம்பாவாய் |