| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 501 | திருப்பாவை || மார்கழி நீராடுவான் என்று நோன்பை ப்ரஸ்தாவித்து, அந் நோன்புக்கு உபகரணங்களான சங்கு முதலியவற்றையும், நோன்பு தலைக் கட்டின பின்னர் அலங்கரித்துக் கொள்ளுதற்கு உபகரணமான ஆடை ஆபரணங்களையும் ப்ரீதி பரீவாஹமாகக் கூடிக் குளிர்ந்து பற்சோறுண்கையையும் கீழிரண்டு பாட்டாலும் அபேஷித்த ஆய்ச்சிகளை நோக்கிக் கண்ணபிரான், பெண்காள்! உங்களுடைய கருத்து இவ்வளவென்று எனக்குத் தோற்ற வில்லை; நீங்கள் இப்போது அபேஷித்தவற்றையும் இன்னுஞ்சில அபேஷித்தால் அவற்றையும் நான் தர வேண்டில் உங்களுடைய நிலைமையை அறிந்து தரவேண்டியிரா நின்றது; பேறு உங்களதான பின்பு நீங்களும் சிறிது முயற்சியுடையீர்களா யிருக்கவேண்டும் அதுக்குடலாக நீங்கள் அநுஷ்டித்த உபாய மேதேனுமுண்டோ? என்று கேட்டருள அதுகேட்ட ஆய்ச்சிகள், ‘பிரானே! எங்கள் நிலைமையை நீ தான் நேரே கண்ணால் காண்கிறிலையோ? அறிவிலிகளான நாங்கள் எடுத்துக் கூறவேண்டும் படி நீ உணராத தொன்றுண்டோ?’ எங்கள் நிலைமையை நன்கு உணரா நின்ற நீ “நீங்களனுட்டித்த உபாய மேதேனுமுண்டோ? என வினவியது மிக அற்புதமாயிருந்ததீ!” -என்று தங்கள் ஸ்வரூப மிருக்கும்படியை அறிவித்து, இவ்விடைப் பெண்கள் கேவலம் தயா விஷயமென்று திருவுள்ளம் பற்றி நீ எங்கள் காரியம் செய்தருள வேணும் என்று விண்ணப்பஞ் செய்யும் பாசுரம், இது. கீழ், போற்றியாம் வந்தோம், செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ? உன்னை அருத்தித்து வந்தோம் என்றிவை முதலான பாசுரங்களினால் ஆய்ச்சிகள் தங்களுக்குள்ள ப்ராப்ய ருசியை வெளியிட்டனர்; அந்த ப்ராப்யத்தைப் பெறுகைக்கு உடலாகத் தங்களுடைய ஆகிஞ்சந்யத்தையும் அவனுடைய உபாயத்வத்தையும் வெளியிடுகின்றனர், இப்பாட்டில் 28 | கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் அறிவுஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம் குறைஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு உறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய். | குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா!, kuraiyu ondruum illaadha govindhaa! - உனக்கொரு குறையுண்டாகிலன்றோ எங்களுக்கொரு குறையுண்டாவது என்ற கருத்தைக் காட்டும் யாம், yaam - நாங்கள் கறவைகள் பின் சென்று, karavaigal pin sendru - பசுக்களின் பின்னே போய் கானம் சேந்து, gaanam sendhu - காடு சேர்ந்து உண்போம், unbom - சரீர போஷணமே பண்ணித் திரியு மவர்களாயும் அறிவு ஒன்றும் இல்லாத, arivu ondruum illaadha - சிறிதளவும் அறிவில்லாத ஆண் குலத்து, aan kulathu - இடைக் குலத்தில் உன் தன்னை, un thannai - உன்னை பிறவி பெறும்தனை புண்ணியம் உடையோம், piravi perumthannai punniyam udaiyom - (ஸஜாதீயனாகப்) பெறுவதற்குத் தக்க புண்ணியமுடையவர்களாயுமிரா நின்றோம் இறைவா, iraiva - ஸ்வாமியான கண்ண பிரானே உன் தன்னோகி உறவு, un thannogi uravu - உன்னோடு (எங்களுக்குண்டான) உறவானது இங்கு தமக்கு ஒழிக்க ஒழியாது, ingu thamakku ozhikka ozhiyadhu - இங்கு உன்னாலும் எம்மாலும் ஒழிக்க ஒழிய மாட்டாது அறியாத பிள்ளைகளோம், ariyadha pillai kaalom - (லோக மரியாதை ஒன்றும்) அறியாத சிறு பெண்களான நாங்கள் உன் தன்னை, un thannai - உன்னை அன்பினால், anbinal - ப்ரீதியினாலே சிறு பேர் அழைத்தனவும், siru per azhaithanavum - சிறிய பேராலே (நாங்கள்) அழைத்ததைக் குறித்தும் நீ, nee - (ஆச்ரித வத்ஸலனான) நீ சீறி அருளாதே, seeri arulaadhe - கோபித்தருளாமல் பறை தாராய், parai thaaraay - பறை தந்தருளவேணும்; எல் ஓர் எம் பாவாய், el or em paavai - எல் ஓர் எம்பாவாய் |