திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 502 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
502திருப்பாவை || கீழெல்லாம் “பறை, பறை” என்று சொல்லி வந்த ஆய்ச்சிகள் அப் பறையின் பொருளை நிஷ்கர்ஷித்து விண்ணப்பஞ்செய்யும் பாசுரம், இது. ‘நாட்டார் இசைகைக்காக ‘நோன்பு’ என்று ஒன்றை வியாஜமாகக் கொண்டு வந்து புகுந்தோமத்தனை யொழிய, எங்களுக்கு உத்தேச்யம் உன் திருவடிகளில் நித்திய கைங்கரியம் பண்ணுகை தான்; இனி ஒரு நொடிப் பொழுதும் உன்னை விட்டு நாங்கள் பிரிந்தோமாக வொண்ணாது; வேறு ஒருவகையான விருப்பமும் எமக்குப் பிறவா வண்ணம் நீயே அருள் புரிய வேணும்’ என்று தலைக் கட்டுகிறார்கள். 29
சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய் பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றுஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்
பதவுரை Show / Hide
கோவிந்தா, govindhaa - கண்ண பிரானே!
சிற்றம் சிறுகாலை, sitram sirukalai - விடி காலத்திலே
வந்து, vandhu - (இவ் விடத்தேற) வந்து
உன்னை சேவித்து, unnai sevithu - உன்னைத் தண்டனிட்டு
உன் பொன் தாமரை அடி போற்றும் பொருள், un pon thaamarai adi potrum porul - உனது அழகிய திருவடித் தாமரைகளை மங்களாசாஸநம் பண்ணுவதற்குப் பிரயோஜனத்தை
கேளாய், kelaay - கேட்டருள வேணும்;
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ, perum meydhu unnum kulathil pirandha nee - பசுக்களை மேய்த்து உண்ணும் இடைக்குலத்தில் பிறந்த நீ
எங்களை, engalai - எங்களிடத்தில்
குற்றேவல், kutraeval - அந்தரங்க கைங்கரியத்தை
கொள்ளாமல் போகாது, kollaamal pogadhu - திருவுள்ளம் பற்றாதொழிய வொண்ணாது;
இற்றை பறை கொள்வான் அன்று காண், itrai parai kolvaan andru kaan - இன்று (கொடுக்கப்படுகிற இப்) பறையைப் பெற்றுக்கொள்வதற்காக நாங்கள் வந்தோமல்லோம்;
எற்றைக்கும், ettraikum - காலமுள்ளவளவும்
ஏழ் ஏழ் பிறவிக்கும், ez ez piravigkum - (உன்னுடைய) எவ் வவதாரங்களிலும்
உன் தன்னோடு, un thannodu - உன்னோடு
உற்றோமே ஆவோம், utrome aavom - உறவு உடையவர்களாகக் கடவோம்;
உனக்கே, unakke - உனக்கு மாத்திரமே
நாம், naam - நாங்கள்
ஆள் செய்வோம், aal seyvom - அடிமை செய்யக் கடவோம்;
எம், em - எங்களுடைய
மற்றை காமங்கள், matrai kaamangal - இதர விஷய விருப்பங்களை
மாற்று, maartru - தவிர்க்கருள வேணும்;
ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavai - ஏல் ஓர் எம் பாவாய்