திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 503 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
503திருப்பாவை || இருபத்தொன்பதாம் பாட்டில், தங்களுடைய உத்தேசயத்தை வெளிப்படையாகக் கூறி, இக் கருத்தை நீ நிறைவேற்றாதொழிய வொண்ணாதென்று நிர்ப்பந்தித்துப் பிரார்த்திக்க, அவனும் ‘அப்படியே செய்கிறோம்’ என்று தலைதுலுக்கப் பெற்று மநோரதம் தலைக்கட்டப் பெற்றபடியைப் பிற்காலத்திலே அக்கருத்து நிலைமையோடே ஆண்டாள் அருளிச்செய்த இப்பிரபந்தத்தை ஓதுவார் எம்பெருமானுடைய திருவருட்கு இலக்காகி மகிழப் பெறுவர் என்று நிகமிக்கின்றவாறாகச் செல்லும் பாசுரம், இது. ஆறாயிரப்படி:- “ஸமகாலத்திலே அநுஷ்டித்தாரோ பாதியும், அநந்தர காலத்தில் அநுகரித்தாளோ பாதியும் பிற்பட்ட காலத்தில் கற்றார்க்குப் பலிக்குமென்கை. ‘கன்றிழந்த தலைநாகு, தோல்கன்றைமடுக்க அதுக்கிரங்குமாபோலே, ஸ்நேஹிகள் சொன்ன இப்பாசுரங்கொண்டு புகவே அதில்லாத நமக்கும் பலிக்கும்’ என்று பட்டர்.” 30
வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை திங்கள் திருமுகத்து சேய்இழையார் சென்றுஇறைஞ்சி அங்கப் பறைகொண்ட ஆற்றை அணி புதுவைப் பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கு இப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைதோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்
பதவுரை Show / Hide
வங்கம் கடல், vangam kadal - கப்பல்களை யுடைய (திருப்பாற்) கடலை
கடைந்த, kadaindha - (தேவர்களுக்காகக்) கடைந்த ஸ்ரீ ய:பதியான
கேசவனை, kaesavanai - கண்ண பிரானை
திங்கள் திரு முகத்து சே இழையார், thingal thiru mukathu se izhaiyaar - சந்திரன் போன்ற அழகிய முகத்தையும் செவ்விய ஆபரணங்களையுமுடைய ஆய்ச்சிகள்
சென்று, sendru - அடைந்து
இறைஞ்சி, iraainji - வணங்கி
அங்கு, angu - அத் திருவாய்ப் பாடியில்
பறைகொண்ட ஆ ஆற்றை, paraikonda aa aatrai - (தங்கள்)புருஷார்த்தத்தைப் பெற்ற அந்த விருத்தாந்தத்தை.
அணி புதுவை, aṇi pudhuvai - அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் (திரு வவதரித்த)
பை கமலம் தண் தெரியல் பட்டர் பிரான், pai kamalam thaṇ theriyal pattar piraan - பசுமை பொருந்திய தாமரை மலர்களினாலான குளிர்ந்த மாலையை யுடைய பெரியாழ்வாருடைய (திருமகளான)
கோதை, ko̱thai - ஆண்டாள்
சொன்ன, sonna - அருளிச் செய்த
சங்கம் தமிழ் மாலை முப்பதும், saṅkam tamizh mālai muppathum - திரள் திரளாக அநுபவிக்க வேண்டிய தமிழ் மாலையாகிய இம் முப்பது பாசுரங்களையும்
தப்பாமே, thappaame - தப்பாமல்
இங்கு, ingu - இந் நிலத்தில்
இ பரிசு, i parisu - இவ் வண்ணமே
உரைப்பார், uraippaar - ஓதுமவர்கள்
ஈர் இரண்டு மால் வரை தோள், eer irandu maal varai thol - பெரிய மலை போன்ற நான்கு திருத் தோள்களை யுடையவனும்
செம்கண் திருமுகத்து, semkan tirumugathu - சிவந்த திருக் கண்களை யுடைய திரு முகத்தை யுடையவனும்
செல்வம், selvam - ஐஸ்வர்யத்தை யுடையனும்
திருமாலால், thirumaalaal - ஸ்ரீ ய:பதியுமான எம்பெருமானாலே
எங்கும், engum - எவ்விடத்தும்
திருஅருள் பெற்று, thiruarul petru - (அவனுடைய) க்ருபையைப் பெற்று
இன்புறுவர், inpurvar - ப்ரஹ்ம ஆனந்த சாலிகளாக
ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavai - ஏல் ஓர் எம்பாவாய்