| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 506 | நாச்சியார் திருமொழி || 1 - தையொரு திங்களும் (கண்ணனோடு கூட்டும்படி காமனைத் தொழுதல்) 3 | மத்த நன்னறு மலர் முருக்க மலர் கொண்டு முப்போது முன்னடி வணங்கி தத்துவமிலி என்று நெஞ்செரிந்து வாசகத்தழித்து உன்னை வைதிடாமே கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு கோவிந்தன் என்பதோர் பேரெழுதி வித்தகன் வேங்கட வாணன் என்னும் விளக்கினில் புக வென்னை விதிக்கிற்றியே | நல்நறு மத்த மலர், Nalnaru Matha Malar - நல்ல மணமிக்க ஊமத்த மலர்களையும் முருக்கமலர்கொண்டு, Murukka Malar Kondu - முருக்க மலர்களையுங் கொண்டு முப்போதும், Muppothum - மூன்று காலங்களிலும் உன் அடி வணங்கி, Un Adi Vanangi - உன் அடியை வணங்கி தத்துவம் இலி என்று நெஞ்சு எரிந்துவாசகத்து அழித்து உன்னை வைதிடாமே ‘இவன் பொய்யான்தெய்வம், என்று, Thathuvam ili Endru Nenju Erindhu Vasakathu Azhithu Unnai Vaithidame 'Ivan Poiyan Theivam', Endru - இவன் பொய்யான்தெய்வம், என்று சொல்லிமனங் கொதித்து அழித்து வாய்கொண்டு உன்னை நிந்திக்க வேண்டாதபடி கொத்து அலர்ப்பூ கணைதொடுத்துக் கொண்டு, Kothu Alar poo kanai Thoduthu Kondu - கொத்துக் கொத்தாக விகஸியா நின்ற புஷ்பங்களாகிற அம்புகளை வில்லில் தொடுத்துக் கொண்டு கோவிந்தன் என்பது ஓர் பேரெழுதி, Govindhan Enbathu Or Per Ezhuthi - கோவிந்த நாமத்தை (நெஞ்சில்) தரித்துக் கொண்டு வித்தகன் வேங்கடம் வாணன் என்னும் விளக்கினில் புக, Vithagan Vengadam Vaanan Enum Vilakinil Puga - அற்புதனான திருவேங்கடமுடையான் என்கிற விளக்கிலே என்னை விதிக்கிற்றி, Ennai Vithikitri - என்னை நீ செய்ய வேணும். |