திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 510 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
510நாச்சியார் திருமொழி || 1 - தையொரு திங்களும் (கண்ணனோடு கூட்டும்படி காமனைத் தொழுதல்) 7
காயுடை நெல்லொடு கரும்பமைத்து கட்டி அரிசி அவல் அமைத்து வாயுடை மறையவர் மந்திரத்தால் மன்மதனே யுன்னை வணங்குகின்றேன் தேசமுன் அளந்தவன் திரிவிக்ரமன் திருக் கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம் சாயுடை வயிறும் என் தட முலையும் தரணியில் தலைப் புகழ் தரக்கிற்றியே
பதவுரை Show / Hide
மன்மதனே, Manmadhane - மன்மதனே!
காய் உடை நெல்லோடு, Kaai Udai Nellodu - பசுங்காய் நெல்லும்
கரும்பு, Karumbu - கரும்பும்
அமைத்து, Amaithu - சமைத்து
கட்டி, Katti - (அதனோடு கூட) கருப்புக் கட்டியும்
அரிசி, Arisi - பச்சரிசியும்
அவல், Aval - அவலும்
அமைத்து, Amaithu - (ஆகிய இவற்றையும்) சமைத்து
அளந்தவன், Alanthavan - (திருவடிகளால்) அளந்தருளினவனும்
திருவிக்கிரமன், Thiruvikkiraman - திருவிக்ரமனென்னும் திருநாமமுடையனுமான கண்ணபிரான்
என்னை, Ennai - என்னுடைய
சாய் உடை, Saai Udai - ஒளியை யுடைய
வயிறும், Vayirum - வயிற்றையும்
மென் தடம் முலையும், Men Thadam Mulaiyum - மென்மையும் பருமையும் பொருந்திய முலைகளையும்
வாய் உடை, Vaai Udai - நல்ல ஸ்வரத்தையுடையராயும்
மறையவர், Maraiyavar - காம சாஸ்திரத்தில் வல்லவர்களாயுமிருப்பவர்களுடைய
மந்திரத்தால், Manthirathal - மந்திரத்தினால்
உன்னை வணங்குகின்றேன், Unnai Vananguginren - உன்னை வணங்குகின்றேன்
முன், Mun - மூவுலகும் மாவலியால் அபஹரிக்கப்பட்ட காலத்தில்
தேசம், Desam - ஸகல லோகங்களையும்
திருக் கைகளால், Thirukkaigalal - (தனது) திருக்கையினால்
தீண்டும் வண்ணம், Theendum Vanam - ஸ்பர்சிக்கும்படி பண்ணி
தரணியில், Tharanaiyil - (இப்) பூமண்டலத்தில்-
தலைப் புகழ், Thalai Pugazh - நிலை நின்ற கீர்த்தியை
தர கிற்றி, Thara Kitri - (நான்பெறும்படி) தந்தருள வேணும்.