| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 510 | நாச்சியார் திருமொழி || 1 - தையொரு திங்களும் (கண்ணனோடு கூட்டும்படி காமனைத் தொழுதல்) 7 | காயுடை நெல்லொடு கரும்பமைத்து கட்டி அரிசி அவல் அமைத்து வாயுடை மறையவர் மந்திரத்தால் மன்மதனே யுன்னை வணங்குகின்றேன் தேசமுன் அளந்தவன் திரிவிக்ரமன் திருக் கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம் சாயுடை வயிறும் என் தட முலையும் தரணியில் தலைப் புகழ் தரக்கிற்றியே | மன்மதனே, Manmadhane - மன்மதனே! காய் உடை நெல்லோடு, Kaai Udai Nellodu - பசுங்காய் நெல்லும் கரும்பு, Karumbu - கரும்பும் அமைத்து, Amaithu - சமைத்து கட்டி, Katti - (அதனோடு கூட) கருப்புக் கட்டியும் அரிசி, Arisi - பச்சரிசியும் அவல், Aval - அவலும் அமைத்து, Amaithu - (ஆகிய இவற்றையும்) சமைத்து அளந்தவன், Alanthavan - (திருவடிகளால்) அளந்தருளினவனும் திருவிக்கிரமன், Thiruvikkiraman - திருவிக்ரமனென்னும் திருநாமமுடையனுமான கண்ணபிரான் என்னை, Ennai - என்னுடைய சாய் உடை, Saai Udai - ஒளியை யுடைய வயிறும், Vayirum - வயிற்றையும் மென் தடம் முலையும், Men Thadam Mulaiyum - மென்மையும் பருமையும் பொருந்திய முலைகளையும் வாய் உடை, Vaai Udai - நல்ல ஸ்வரத்தையுடையராயும் மறையவர், Maraiyavar - காம சாஸ்திரத்தில் வல்லவர்களாயுமிருப்பவர்களுடைய மந்திரத்தால், Manthirathal - மந்திரத்தினால் உன்னை வணங்குகின்றேன், Unnai Vananguginren - உன்னை வணங்குகின்றேன் முன், Mun - மூவுலகும் மாவலியால் அபஹரிக்கப்பட்ட காலத்தில் தேசம், Desam - ஸகல லோகங்களையும் திருக் கைகளால், Thirukkaigalal - (தனது) திருக்கையினால் தீண்டும் வண்ணம், Theendum Vanam - ஸ்பர்சிக்கும்படி பண்ணி தரணியில், Tharanaiyil - (இப்) பூமண்டலத்தில்- தலைப் புகழ், Thalai Pugazh - நிலை நின்ற கீர்த்தியை தர கிற்றி, Thara Kitri - (நான்பெறும்படி) தந்தருள வேணும். |