Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 511 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
511நாச்சியார் திருமொழி || 1 - தையொரு திங்களும் (கண்ணனோடு கூட்டும்படி காமனைத் தொழுதல்) 8
மாசுடை யுடம்போடு தலை யுலறி வாய்ப்புறம் வெளுத்து ஒரு போதும் உண்டு
தேசுடைத் திறலுடைக் காமதேவா நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்
பேசுவது ஓன்று இங்கு உண்டு எம்பெருமான் பெண்மையைத் தலை யுடைத்தாக்கும் வண்ணம்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப் பேறு எனக்கு அருள் கண்டாய்
தேச உடை, Desa Udai - (பிரிந்தாரைக் கூட்டு கையால் வந்த) புகரை யுடையவனும்
திறல் உடை, Thiral Udai - மிடுக்கை யுடையவனும்
எம்பெருமான், Emperuman - எமக்கு ஸ்வாமியுமான
காமதேவா, Kamadeva - மன்மதனே!
மாசு உடை, Maasu Udai - அழுக்குப் படிந்த
உடம்பொடு, Udampodu - உடம்போடே கூட
தலை, Thalai - தலை மயிரை
உலறி, Ulari - விரித்துக் கொண்டு
வாய்ப் புறம் வெளுத்து, Vaai Puram Veluthu - (தாம்பூல சர்வணமில்லாமையால்) உதடுகள் வெளுப்பாகப் பெற்று
ஒரு போது உண்டு, Oru Podhu Undu - ஒரு வேளை புஜித்து
நோற்கின்ற நோன்பினை, Norkindra Nonbinai - (இப்படிப்பட்ட வருத்தத்துடன்) (நான்) நோற்கின்ற நோன்பை
குறிக்கொள், Kurikkol - (நீ எப்பொழுதும்) ஞாபகத்தில் வைக்க வேணும்’
இங்கு, Ingu - இப்போது
பேசுவது ஒன்று உண்டு, Pesuvadhu Ondru Undu - சொல்ல வேண்டுவது ஒன்று உளது (அதைச் சொல்லுகிறேன் கேள்)
பெண்மையை, Penmaiyaai - (என்னுடைய) ஸத்தையை
தலை யுடையத் தாக்கும் வண்ணம், Thalai Udaiya Thaakkum Vannam - ஜீவித்திருக்கும்படி செய்வதற் குறுப்பாக
கேசவன் நம்பியை கால் பிடிப்பாள் என்னும், Kesavan Nambiyai Kaal Pidippaal Ennum - கண்ண பிரானுக்குக் கால் பிடிப்பவன் இவள் என்கிற
இப் பேறு, Ipperu - இப் புருஷார்த்தத்தை
எனக்கு அருள், Enakku Arul - எனக்கு அருளவேணும்.