| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 513 | நாச்சியார் திருமொழி || 1 - தையொரு திங்களும் (கண்ணனோடு கூட்டும்படி காமனைத் தொழுதல்) 10 | கருப்பு வில் மலர்க்கணைக் காமவேளைக் கழலிணை பணிந்து அங்கு ஓர் கரி அலற மருப்பினை யொசித்துப் புள் வாய் பிளந்த மணி வண்ணற்கு என்னை வகுத்திடு என்று பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை விருப்புடையின் தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவரே | கரும்பு வில் மலர்கணைகாமன் வேளை, Karumbu Vil Malarkanai Kaaman Velai - கரும்பாகிற வில்லையும் புஷ்பங்களாகிற அம்புகளையுமுடைய மன்மதனுடைய கழல் இணை பணிந்து, Kazhal Inai Panindhu - இரண்டு பாதங்களையும் வணங்கி அங்கு ஓர் கரி அலற மருப்பினை ஒசித்து புள்வாய் பிளந்த, Angu Or Kari Alara Maruppinai Oshithu Pulvaai Pilandha - கம்ஸன் மாளிகை வாசலில் (குவாலயாபீடமென்ற) ஒரு யானையானது வீரிடும்படியாக (அதன்) கொம்புகளை முறித்தவனும், பகாஸுரனுடைய வாயைக் கீண்டெறிந்தவனும், மணிவண்ணற்கு என்னை வகுத்திடு என்று, Manivannarku ennai Vakuthidu Endru - நீலமணி போன்ற நிறத்தானுமான கண்ணபிரானுக்கு என்னை அடிமைப்படுத்தவேணும் என்று பொருப்பு அன்ன, Poruppu Anna - மலை போன்ற மாடம், Maadam - மாடங்கள் பொலிந்து தோன்றும், Polindhu Thondrum - மிகவும் விளங்கா நிற்கப் பெற்ற புதுவையர் , Pudhuvaiyar - ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளவர்கட்கு கோன், Kon - ஸ்வாமியான விட்டு சித்தன், Vittu Sithan - பெரியாழ்வாருடைய (மகளாகிற) கோதை, Kodhai - ஆண்டாள் (அருளிச் செய்த) விருப்புடை, Viruppudai - விருப்பமடியாகப் பிறந்த இன் தமிழ் மாலை, In Tamizh Maalai - இனிய தமிழ்மாலை யாகிய இப் பாசுரங்களை வல்லார், Vallar - ஓத வல்லவர்கள் விண்ணவர் கோன், Vinnavar Kon - நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானுடைய அடி, Adi - திருவடிகளை நண்ணுவர், Nannuvar - கிட்டப் பெறுவர் |