| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 514 | நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 1 | நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே உன்னை மாமி தன மகனாகப் பெற்றால் எமக்கு வாதை தவிருமே காமன் போதரு காலம் என்று பங்குனி நாள் கடை பாரித்தோம் தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே | நாமம் ஆயிரம், Naamam Aayiram - ஸஹஸ்ர நாமத்தினால் ஏத்த நின்ற, Etha Nindra - (நித்ய ஸூரிகள்) துதிக்கும்படி நின்ற நாராயணா, Narayana - நாராயணனே! நரனே, Narane - (சக்கரவர்த்தித் திருமகனாய்ப் பிறந்து) மானிட வுடல் கொண்டவனே! உன்னை, Unnai - (ஏற்கனவே தீம்பனான) உன்னை மாமி தன் மகன் ஆக பெற்றால், Maami Than Magan Aaga Petral - பர்த்தாவாகவும் பெற்றால் எமக்கு வாதை தவிருமே, Emakku Vaadhai Thavirume - நாங்கள் நலிவுபடா திருக்க முடியுமோ?’ காமன் போதரு காலம் என்று, Kaaman Potharu Kaalam Endru - மன்மதன் வருங்கால மென்று பங்குனி நாள், Panguni Naal - பங்குனி மாதத்தில்- கடை, Kadai - (அவன் வரும்) வழியை பாரித்தோம், Paarithom - கோடித்தோம்’ தீமை செய்யும், Theemai Seiyum - தீம்புகளைச் செய்கின்ற சிரீதரா, Siridhara - ஸ்ரீ பதியான கண்ண பிரானே! எங்கள் சிற்றில், Engal sitril - நாங்களிழைக்கின்ற மணற் கொட்டகங்களை வந்து , Vandhu - (நாங்கள் விளையாடுமிடத்தில்) வந்து சிதையேல், Sidhayel - நீ அழிக்க வேண்டா. |