| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 515 | நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 2 | இன்று முற்றும் முதுகு நோவ இருந்து இளைத்த விச் சிற்றிலை நன்றும் கண்ணுற நோக்கி நாம் கொளும் ஆர்வம் தன்னைத் தணி கிடாய் அன்று பாலகனாகி ஆலிலை மேல் துயின்ற வெம்மாதியாய் என்றும் உன் தனக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது எம் பாவமே | இன்று முற்றும், Indru Mutrum - இன்றைய தினம் முழுவதும் முதுகு நோவ, Mudhugu Nova - முதுகு நோம்படி இருந்து, Irundhu - உட்கார்ந்து கொண்டு இழைத்த, Izhaitha - ஸ்ருஷ்டித்த இச் சிற்றிலை, Is Sitrilai - இந்தச் சிற்றிலை நன்றும், Nandrum - நன்றாக கண் உற நோக்கி, Kan Ura Nokki - (நீ) கண் பொருந்தும்படி பார்த்து, நாம் கொள்ளும் ஆர்வம் தன்னை தணிகிடாய், Naam Kollum Aarvam Thannai Thanikidai - நாங்கள் கொண்டிருக்கிற அபிநிவேசத்தைத் தணியச் செய் கிடாய்’ அன்று, Andru - மஹா ப்ரளயம் வந்த காலத்தில் பாலகன் ஆகி, Balakan Aagi - சிசு வடிவு கொண்டு ஆல் இலை மேல், Aal ilai Mel - ஆலந்தளிரின் மேல் துயின்ற, Thuyindra - கண் வளர்ந்தருளினவனும் எம் ஆதியாய், Em Aadhiyai - எமக்குத் தலைவனுமான கண்ண பிரானே! என்றும், Endrum - எக் காலத்திலும் உன் தனக்கு, Un Thanakku - உனக்கு எங்கள் மேல், Engal Mel - எம்மிடத்தில் இரக்கம் எழாதது, Irakkam Ezhathadhu - தயவு பிறவாமலிருப்பது எம் பாவமே, Em Paavame - நாங்கள் பண்ணின பாவத்தின் பயனேயாம். |