திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 516 | நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 3 | குண்டு நீர் உறை கோளரி மத யானை கோள் விடுத்தாய் உன்னைக்
கண்டு மாலுறு வோங்களைக் கடைக்கண்களால் இட்டு வாதியேல்
வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளைக் கைகளால் சிரமப் பட்டோம்
தெண் திரைக் கடல் பள்ளியாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே | பதவுரை Show / Hideகுண்டு, Kundu - மிக்க ஆழத்தை யுடைத்தான நீர், Neer - கடலிலே உறை, Urai - சாய்ந்தருள்பவனும் கோள் அரி!, Kol Ari! - மிடுக்கையுடைய சிங்கம் போன்றவனும் மதம் யானை கோள் விடுத்தாய், Madham Yaanai Kol Viduthaai - மதம் மிக்க கஜேந்திராழ்வானுக்கு (முதலையால் நேர்ந்த) துன்பத்தைத் தொலைத்தருளி னவனுமான கண்ண பிரானே! உன்னை, Unnai - (அடியார் துயரைத் தீர்க்க வல்ல) உன்னை கண்டு, Kandu - பார்த்து மால் உறுவோங்களை, Maal Uruvongalai - ஆசைப் படுகின்ற எங்களை கடைக் கண்களால் இட்டு, Kadai Kangalal Ittu - கடைக் கண்களால் பார்த்து வாதியேல், Vaadhiyel - ஹிம்ஸிக்க வேண்டா யாம், Yaam - நாங்கள் வண்டல், Vandal - வண்டலிலுள்ள நுண் மணல், Nun Manal - சிறிய மணல்களை வளை கைகளால், Valai Kaigalal - வளையல்கள் அணிந்த கைகளினால் தெள்ளி, Thelli - புடைத்து சிரமப்பட்டோம், Siramapattom - மிகவும் கஷ்டப் பட்டோம் தெண் திரை, Then Thirai - தெளிந்த அலைகளை யுடைய கடல், Kadal - திருப்பாற்கடலை பள்ளியாய், Palliyaai - படுக்கையாக வுடையவனே! எங்கள் சிற்றில் வந்து, Engal sitril Vandhu - நாங்களிழைக்கின்ற மணற் கொட்டகங்களை (நாங்கள் விளையாடுமிடத்தில்) வந்து சிதையேல், Sidhaiyel - நீ அழிக்க வேண்டா. |