Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 517 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
517நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 4
பெய்யு மா முகில் போல் வண்ணா உன்தன் பேச்சும் செய்கையும் எங்களை
மையல் ஏற்றி மயக்க உன்முகம் மாய மந்திரம் தான் கொலோ
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம்
செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே
பெய்யும், Peiyum - வர்ஷியா நின்றுள்ள
மா முகில் போல் வண்ணா, Maa Mukil Pol Vanna - காள மேகம் போன்ற திரு நிறத்தை யுடையவனே!
உன் தன், Unn Than - உன்னுடைய
பேச்சும் செய்கையும், Pechum Seikaiyum - (தாழ்ந்த) வார்த்தைகளும், (தாழ்ந்த) வியாபாரங்களும்
எங்களை, Engalai - எங்களை
மையல் ஏற்றி, Mailal etri - பிச்சேறப் பண்ணி
மயக்க, Mayakka - அறிவு கெடுக்கைக்கு
உன் முகம், Unn Mugam - உன்னுடைய முகமானது
மாயம் மந்திரம் தான் கொலொ, Maayam Manthiram Thaankolo - சுக்குப் பொடியோ?
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு, Noiyar Pillaigal Enbatharku - அற்பத்தனமுடைய சிறுமியர் இவர்கள்’ என்று நீ சொல்லுவாய் என்று பயப்பட்டு
நாங்கள், Naangal - நாங்கள்
உன்னை, Unnai - உன்னைக் குறித்து
நோவ உரைக்கிலோம், Nova Uraikilom - நெஞ்சு புண்படும்படி (ஒன்றும்) சொல்லுகிறோமில்லை
செய்ய தாமரை கண்ணினாய், Seiya Thamarai Kanninai - புண்டாரிகாக்ஷனே!
எங்கள் சிற்றில், Engal sitril - நாங்களிழைக்கின்ற மணற் கொட்டகங்களை
வந்து , Vandhu - (நாங்கள் விளையாடுமிடத்தில்) வந்து
சிதையேல், Sidhaiyel - நீ அழிக்க வேண்டா.