Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 519 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
519நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 6
முற்றிலாத பிள்ளைகளோம் முலைபோந்திலாதோமை நாடொறும்
சிற்றில் மேலிட்டுக் கொண்டு நீ சிறிதுண்டு திண்ணென நாமது
கற்றிலோம் கடலை யடைத்தரக்கர் குலங்களை முற்றவும்
செற்று இலங்கையைப் பூசலாக்கிய சேவகா எம்மை வாதியேல்
கடலை அடைத்து, Kadalai Adaithu - ஸேது பந்தம் பண்ணி
அரக்கர் குலங்களை முற்றவும், Arakkar Kulangalai Mutravum - ராக்ஷஸருடைய குலங்களை முழுதும்
செற்று, Setru - களைந்தொழித்து
இலங்கையை, Ilangaiyai - லங்கையை
பூசல் ஆக்கிய, Pusal Aakkiya - அமர்க்களப் படுத்தின
சேவகா, Sevaka - வீரப்பாடு உடையவனே!
முற்றிலாத பிள்ளைகளோம், Mutrilatha Pillaigalom - முற்றாத இளம் பிள்ளைகளாய்
முலை போந்திலாதோமை, Mulai Pondhilaathomai - முலையும் கிளரப் பெறாத வெங்களை
நாள் தோறும், Naal Thorum - நாள் தோறும்
சிற்றில் மேல் இட்டுக் கொண்டு, Sitril Mel Ittu Kondu - சிற்றில் விஷயமாக ஒரு வியாஜத்தை வைத்துக் கொண்டு
நீ சிறிது உண்டு, Nee Siridhu Undu - நீ செய்யுஞ் செய்திகள் சில உள
அது திண்ணன நாம் கற்றிலோம், Athu Thinnana Naam Katrilom - நீ செய்யுஞ் செய்திகள் சில உள
எம்மை வாதியேல், Emmai Vaadhiyel - எங்களை (நீ) துன்பப்படுத்த வேண்டா