| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 519 | நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 6 | முற்றிலாத பிள்ளைகளோம் முலைபோந்திலாதோமை நாடொறும் சிற்றில் மேலிட்டுக் கொண்டு நீ சிறிதுண்டு திண்ணென நாமது கற்றிலோம் கடலை யடைத்தரக்கர் குலங்களை முற்றவும் செற்று இலங்கையைப் பூசலாக்கிய சேவகா எம்மை வாதியேல் | கடலை அடைத்து, Kadalai Adaithu - ஸேது பந்தம் பண்ணி அரக்கர் குலங்களை முற்றவும், Arakkar Kulangalai Mutravum - ராக்ஷஸருடைய குலங்களை முழுதும் செற்று, Setru - களைந்தொழித்து இலங்கையை, Ilangaiyai - லங்கையை பூசல் ஆக்கிய, Pusal Aakkiya - அமர்க்களப் படுத்தின சேவகா, Sevaka - வீரப்பாடு உடையவனே! முற்றிலாத பிள்ளைகளோம், Mutrilatha Pillaigalom - முற்றாத இளம் பிள்ளைகளாய் முலை போந்திலாதோமை, Mulai Pondhilaathomai - முலையும் கிளரப் பெறாத வெங்களை நாள் தோறும், Naal Thorum - நாள் தோறும் சிற்றில் மேல் இட்டுக் கொண்டு, Sitril Mel Ittu Kondu - சிற்றில் விஷயமாக ஒரு வியாஜத்தை வைத்துக் கொண்டு நீ சிறிது உண்டு, Nee Siridhu Undu - நீ செய்யுஞ் செய்திகள் சில உள அது திண்ணன நாம் கற்றிலோம், Athu Thinnana Naam Katrilom - நீ செய்யுஞ் செய்திகள் சில உள எம்மை வாதியேல், Emmai Vaadhiyel - எங்களை (நீ) துன்பப்படுத்த வேண்டா |