Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 520 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
520நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 7
பேத நன்கறிவார்களோடு இவை பேசினால் பெரிதின் சுவை
யாதும் ஓன்று அறியாத பிள்ளைகளோமை நீ நலிந்து என் பயன்
ஒதமா கடல் வண்ணா உன் மணவாட்டிமாரோடு சூழறும்
சேதுபந்தம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே
பேதம், Pedham - (உன் பேச்சின்) வாசியை
நன்கு அறிவார்களோடு, Nangu Arivargalodu - நன்றாக அறிய வல்லவரோடு
இவை, Ivai - இப் பேச்சுக்களை
பேசினால், Pesinaal - பேசினால்
பெரிது இன் சுவை, Peridhu In Suvai - மிகவும் போக்யமாயிருக்கும்
யாது ஒன்றும் அறியாத, Yaadhu Ondrum Ariyaadha - எவ்வகையான பாவத்தை யுமறிய மாட்டாத
பிள்ளைகளோமை, Pillaigalomai - சிறுப் பெண்களான எங்களை
நீ நலிந்து என் பயன், Nee Nalindhu En Payan - நீ வருத்த முறுத்துவதனால் என்ன பயன்?
ஓதம், Odham - திரைக் கிளப்பத்தை யுடைய
மா கடல், Maa Kadal - பெரிய கடலை யொத்த
வண்ண, Vanna - திரு நிறத்தை யுடைய கண்ண பிரானே!
சேது பந்தம் திருந்தினாய், Sedhu Bandham Thirundhinaai - திருவணை கட்டினவனே!
உன் மணவாட்டிமாரொடு சூழறும், Un Manavaatimaarodu Soozharum - உன்னுடைய பத்தினிகளின் மேல் ஆணை
எங்கள் சிற்றில், Engal Sitril - நாங்களிழைக்கின்ற மணற் கொட்டகங்களை
வந்து, Vandhu - (நாங்கள் விளையாடுமிடத்தில்) வந்து
சிதையேல், Sidhaiyel - நீ அழிக்க வேண்டா