திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 521 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
521நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 8
வட்ட வாய்ச் சிறு தூதையோடு சிறு சுளகும் மணலும் கொண்டு இட்ட மாவிளையோடு வோங்களைச் சிற்றில் ஈடழித்து என் பயன் தொட்டுதைத்து நலியேல் கண்டாய் சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய் கட்டியும் கைத்தாலின்னாமை அறிதியே கடல் வண்ணனே
பதவுரை Show / Hide
சுடர் சக்கரம் கையில் ஏந்தினாய், Sudar Sakkaram Kaiyil Aendhinaai - உன்னுடைய பத்தினிகளின் மேல் ஆணை திருக் கையில் தரித்திரா நின்றுள்ள கண்ண பிரானே!
கடல் வண்ணனே!, Kadal Vannane! - கடல் வண்ணனே!
வட்டம் வாய், Vattam Vaai - வட்ட வடிவமான வாயை யுடைய
சிறு தூரிதையோடு, Siru Thoorithaiyodu - சிறிய பானையோடு
சிறு சுளகும், Siru Sulakum - சிறிய முச்சிலையும்
மணலும் கொண்டு, Manalum Kondu - மணலையும் கொண்டு வந்து
இட்டமா, Ittamaa - இஷ்டப்படி
விளையாடுவோங்களை, Vilaiyaaduvongalai - விளையாடுகிற எங்களுடைய
சிற்றில், Sitril - சிற்றிலை
ஈடழித்து, Eedazhithu - மறுபடியும் உபயோகப் படாதபடி அழிப்பதனால்
என் பயன்?, En Payan? - என் பயன்?
தொட்டு, Thottu - கையால் தொட்டும்
உதைத்து, Udhaithu - காலால் உதைத்தும்
நலியேல் கண்டாய், Naliyel Kandaai - ஹிம்ஸியாதொழி கிடாய்
கைத்தால், Kaithaal - நெஞ்சு கசத்துப் போனால்
கட்டியும், Kattiyum - கருப்புக் கட்டியும்
இன்னாமை, Innaamai - ருசியாது என்பதை
அறிதியே, Arithiye - அறிவா யன்றோ?