| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 521 | நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 8 | வட்ட வாய்ச் சிறு தூதையோடு சிறு சுளகும் மணலும் கொண்டு இட்ட மாவிளையோடு வோங்களைச் சிற்றில் ஈடழித்து என் பயன் தொட்டுதைத்து நலியேல் கண்டாய் சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய் கட்டியும் கைத்தாலின்னாமை அறிதியே கடல் வண்ணனே | சுடர் சக்கரம் கையில் ஏந்தினாய், Sudar Sakkaram Kaiyil Aendhinaai - உன்னுடைய பத்தினிகளின் மேல் ஆணை திருக் கையில் தரித்திரா நின்றுள்ள கண்ண பிரானே! கடல் வண்ணனே!, Kadal Vannane! - கடல் வண்ணனே! வட்டம் வாய், Vattam Vaai - வட்ட வடிவமான வாயை யுடைய சிறு தூரிதையோடு, Siru Thoorithaiyodu - சிறிய பானையோடு சிறு சுளகும், Siru Sulakum - சிறிய முச்சிலையும் மணலும் கொண்டு, Manalum Kondu - மணலையும் கொண்டு வந்து இட்டமா, Ittamaa - இஷ்டப்படி விளையாடுவோங்களை, Vilaiyaaduvongalai - விளையாடுகிற எங்களுடைய சிற்றில், Sitril - சிற்றிலை ஈடழித்து, Eedazhithu - மறுபடியும் உபயோகப் படாதபடி அழிப்பதனால் என் பயன்?, En Payan? - என் பயன்? தொட்டு, Thottu - கையால் தொட்டும் உதைத்து, Udhaithu - காலால் உதைத்தும் நலியேல் கண்டாய், Naliyel Kandaai - ஹிம்ஸியாதொழி கிடாய் கைத்தால், Kaithaal - நெஞ்சு கசத்துப் போனால் கட்டியும், Kattiyum - கருப்புக் கட்டியும் இன்னாமை, Innaamai - ருசியாது என்பதை அறிதியே, Arithiye - அறிவா யன்றோ? |