Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 521 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
521நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 8
வட்ட வாய்ச் சிறு தூதையோடு சிறு சுளகும் மணலும் கொண்டு
இட்ட மாவிளையோடு வோங்களைச் சிற்றில் ஈடழித்து என் பயன்
தொட்டுதைத்து நலியேல் கண்டாய் சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய்
கட்டியும் கைத்தாலின்னாமை அறிதியே கடல் வண்ணனே
சுடர் சக்கரம் கையில் ஏந்தினாய், Sudar Sakkaram Kaiyil Aendhinaai - உன்னுடைய பத்தினிகளின் மேல் ஆணை திருக் கையில் தரித்திரா நின்றுள்ள கண்ண பிரானே!
கடல் வண்ணனே!, Kadal Vannane! - கடல் வண்ணனே!
வட்டம் வாய், Vattam Vaai - வட்ட வடிவமான வாயை யுடைய
சிறு தூரிதையோடு, Siru Thoorithaiyodu - சிறிய பானையோடு
சிறு சுளகும், Siru Sulakum - சிறிய முச்சிலையும்
மணலும் கொண்டு, Manalum Kondu - மணலையும் கொண்டு வந்து
இட்டமா, Ittamaa - இஷ்டப்படி
விளையாடுவோங்களை, Vilaiyaaduvongalai - விளையாடுகிற எங்களுடைய
சிற்றில், Sitril - சிற்றிலை
ஈடழித்து, Eedazhithu - மறுபடியும் உபயோகப் படாதபடி அழிப்பதனால்
என் பயன்?, En Payan? - என் பயன்?
தொட்டு, Thottu - கையால் தொட்டும்
உதைத்து, Udhaithu - காலால் உதைத்தும்
நலியேல் கண்டாய், Naliyel Kandaai - ஹிம்ஸியாதொழி கிடாய்
கைத்தால், Kaithaal - நெஞ்சு கசத்துப் போனால்
கட்டியும், Kattiyum - கருப்புக் கட்டியும்
இன்னாமை, Innaamai - ருசியாது என்பதை
அறிதியே, Arithiye - அறிவா யன்றோ?