| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 522 | நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 9 | முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டிப் புன் முறுவல் செய்து சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக் கடவையோ கோவிந்தா முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய் எம்மைப் பற்றி மெய்ப் பிணக்கிட்டக்கால் இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார் | கோவிந்தா, Govindha - கண்ணபிரானே! முற்ற மண் இடம் தாவி, Muttra man idam thaavi - (ஒரு திருவடியினால்) பூ மண்டலம் முழுவதையும் தாவி யளந்து விண் உற நீண்டு, Vin ura neendu - பரமபதத்தளவு ஓங்கி அளந்து கொண்டாய், Alanthu kondai - (மற்றொரு திருவடியினால் மேலுலகங்களை) அளந்து கொண்டவனே! முற்றத்தூடு, Mutrathoodu - (நாங்கள் ஏகாந்தமாக விளையாடுகிற) முற்றத்திலே புகுந்து, Pugundhu - நுழைந்து நின் முகம் காட்டி, Nin mugam kaatti - உனது திரு முகத்தை (எங்களுக்குக்) காண்பித்து புன் முறுவல் செய்து, Pun muruval seidhu - புன் சிரிப்புச் சிரித்து சிற்றிலோடு எங்கள் சிந்தையும், Sitrilodu engal sindhaiyum - எங்கள் சிற்றிலையும் நெஞ்சையும் சிதைக்கக் கடவையோ, Sithaikka kadavaiyo - அழிக்கக் கடவாயோ? எம்மைப் பற்றி, Emmai patri - (அவ்வளவோடும் நில்லாமல்) எங்களோடே மெய் பிணக்கு இட்டக்கால், Mei pinakku ittakaal - கலவியும் ப்ரவருத்தமானால் இந்த பக்கம் நின்றவர், Indha pakkam nindravar - அருகில் நிற்பவர்கள் என் சொல்லார், En sollaar - என்ன சொல்ல மாட்டார்கள்? |