Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 522 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
522நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 9
முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டிப் புன் முறுவல் செய்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக் கடவையோ கோவிந்தா
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய் எம்மைப்
பற்றி மெய்ப் பிணக்கிட்டக்கால் இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார்
கோவிந்தா, Govindha - கண்ணபிரானே!
முற்ற மண் இடம் தாவி, Muttra man idam thaavi - (ஒரு திருவடியினால்) பூ மண்டலம் முழுவதையும் தாவி யளந்து
விண் உற நீண்டு, Vin ura neendu - பரமபதத்தளவு ஓங்கி
அளந்து கொண்டாய், Alanthu kondai - (மற்றொரு திருவடியினால் மேலுலகங்களை) அளந்து கொண்டவனே!
முற்றத்தூடு, Mutrathoodu - (நாங்கள் ஏகாந்தமாக விளையாடுகிற) முற்றத்திலே
புகுந்து, Pugundhu - நுழைந்து
நின் முகம் காட்டி, Nin mugam kaatti - உனது திரு முகத்தை (எங்களுக்குக்) காண்பித்து
புன் முறுவல் செய்து, Pun muruval seidhu - புன் சிரிப்புச் சிரித்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும், Sitrilodu engal sindhaiyum - எங்கள் சிற்றிலையும் நெஞ்சையும்
சிதைக்கக் கடவையோ, Sithaikka kadavaiyo - அழிக்கக் கடவாயோ?
எம்மைப் பற்றி, Emmai patri - (அவ்வளவோடும் நில்லாமல்) எங்களோடே
மெய் பிணக்கு இட்டக்கால், Mei pinakku ittakaal - கலவியும் ப்ரவருத்தமானால்
இந்த பக்கம் நின்றவர், Indha pakkam nindravar - அருகில் நிற்பவர்கள்
என் சொல்லார், En sollaar - என்ன சொல்ல மாட்டார்கள்?