| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 523 | நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 10 | சீதை வாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டு சித்தன் தன் கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவின்றி வைகுந்தம் சேர்வரே | வாய் அமுதம், Vaai amudham - அதராம்ருதத்தை உண்டாய், Undaai - பருகினவனே! எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று, Engal sitril nee sidhaiyel endru - நாங்கள் இழைக்குஞ் சிற்றிலை நீ அழிக்கா தொழியவேணும் என்று வீதிவாய், Veethivaai - வீதியிலே விளையாடும், Vilaiyaadum - விளையாமாநின்ற ஆயர் சிறுமியர், Aayar sirumiyar - இடைப் பெண்களுடைய மழலைச் சொல்லை, Mazhalai sollai - இளம் பருவத்துக்குரிய மெல்லிய சொல்லை உட்கொண்டு வேதம் வாய், Vedham vaai - வேதத்தை உச்சாரிக்கின்ற வாயையுடையவர்களும் தொழிலார்கள், Thozhilaargal - வைதிகத் தொழில்களைச் செய்பவருமான (பரமை காந்திகள் வாழ், Vaazh - வாழுமிடமான வில்லிபுத்தூரிர், Villiputhoorir - ஸ்ரீ வில்லிபத்தூரிருக்கு மன், Man - தலைவரான விட்டு சித்தன் தன், Vittu chithan than - பெரியாழ்வாருடைய திருமகளான கோதை, Kothai - ஆண்டாளுடைய வாய் வாக்கில், Vaai vaakkil - நின்று அவதரித்த தமிழ், Thamizh - தமிழ்ப்பாசுரங்களை வல்லவர், Vallavar - ஓதவல்லவர்கள் குறைவு, Kuraivu - இன்றி குறைவில்லாமல் வைகுந்தம் சேர்வர், Vaigundham servar - பரமபதஞ் சேரப்பெறுவர். |