| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 524 | நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 1 | கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம் ஆழியம் செல்வன் எழுந்தான் அரவணை மேல் பள்ளி கொண்டாய் ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம் தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்து அருளாயே | அரவு அணை மேல், Aravu anai mel - திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேலே பள்ளி கொண்டாய், Palli kondai - திருக் கண் வளர்ந்தருளுமவனே! குடைந்து, Kudainthu - (குளத்தில்) அவகாஹித்து நீர் ஆடுவான், Neer aaduvan - நீராடுவதற்காக கோழி அழைப்பதன் முன்னம், Kozhi azhaippadhan munnam - கோழி கூவுதற்கு முன்னம் போந்தோம், Pondhom - (இவ்விடம்) வந்தோம், (இப்போதோ வென்றால்,) பொய்கைக்கு, Poigaikku - குளத்திற்கு வாரோம், Vaarom - நாங்கள் வருவதில்லை செல்வன், Selvan - (ஸ்ரீ மந்நாராயணன் தன்னிடத்து நித்ய வாஸம் பண்ணப் பெறுகையாகிற) செல்வத்தை யுடையனான ஆழியன், Aazhiyan - சூரியன் எழுந்தான், Ezhundhaan - உதித்தான் ஆற்றவும் ஏழமை பட்டோம், Aatravum ezhamai pattom - (நாங்கள் உன்னாலே) மிகவும் இளிம்பு பட்டோம் இனி, Ini - இனி மேல் என்றும், Endrum - என்றைக்கும் தோழியும் நானும் தொழுதோம், Thozhiyum naanum thozhudhom - தோழியும் நானுமாக (உன்னை) ஸேவியா நின்றோம் துகிலை, Thugilai - (எங்களுடைய) சேலைகளை பணித்தருளாய், Panitharulaai - தந்தருள வேணும் |