Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 524 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
524நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 1
கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம்
ஆழியம் செல்வன் எழுந்தான் அரவணை மேல் பள்ளி கொண்டாய்
ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம்
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்து அருளாயே
அரவு அணை மேல், Aravu anai mel - திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேலே
பள்ளி கொண்டாய், Palli kondai - திருக் கண் வளர்ந்தருளுமவனே!
குடைந்து, Kudainthu - (குளத்தில்) அவகாஹித்து
நீர் ஆடுவான், Neer aaduvan - நீராடுவதற்காக
கோழி அழைப்பதன் முன்னம், Kozhi azhaippadhan munnam - கோழி கூவுதற்கு முன்னம்
போந்தோம், Pondhom - (இவ்விடம்) வந்தோம், (இப்போதோ வென்றால்,)
பொய்கைக்கு, Poigaikku - குளத்திற்கு
வாரோம், Vaarom - நாங்கள் வருவதில்லை
செல்வன், Selvan - (ஸ்ரீ மந்நாராயணன் தன்னிடத்து நித்ய வாஸம் பண்ணப் பெறுகையாகிற) செல்வத்தை யுடையனான
ஆழியன், Aazhiyan - சூரியன்
எழுந்தான், Ezhundhaan - உதித்தான்
ஆற்றவும் ஏழமை பட்டோம், Aatravum ezhamai pattom - (நாங்கள் உன்னாலே) மிகவும் இளிம்பு பட்டோம்
இனி, Ini - இனி மேல்
என்றும், Endrum - என்றைக்கும்
தோழியும் நானும் தொழுதோம், Thozhiyum naanum thozhudhom - தோழியும் நானுமாக (உன்னை) ஸேவியா நின்றோம்
துகிலை, Thugilai - (எங்களுடைய) சேலைகளை
பணித்தருளாய், Panitharulaai - தந்தருள வேணும்