| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 525 | நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 2 | இது என் புகுந்தது இங்கு அந்தோ இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய் மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே விதி இன்மையால் அது மாட்டோம் வித்தகப் பிள்ளாய் விரையேல் குதி கொண்டு அரவில் நடித்தாய் குருந்திடைக் கூறை பணியாய் | இங்கு, Ingu - இங்கே புகுந்து இது என், Pugundhu idhu en - (நீ) வந்து சேர்ந்த விதற்குக் காரணமென்ன? இப் பொய்கைக்கு, Ip poigaikku - இக் குளத்திற்கு எவ்வாறு வந்தாய், Evvaaru vandhaai - எவ் வழியாலே வந்தாய்? மது இன் துழாய் முடிமாலே, Madhu in thuzhaai mudimaale - தேன் மாறாத இனிய திருத்துழாய் மாலை சூடிய திருவபிஷேகத்தை யுடைய பெரியோனே! மாயனே, Maayane - ஆச்சரிய சக்தி யுடையவனே! எங்கள் அமுதே, Engal amudhe - எங்களுக்கு அம்ருதம் போல் இனியவனானவனே! விதி இன்மையால், Vidhi inmaiyal - விதி யில்லாமையாலே அது மாட்டோம், Adhu maattom - ஸம்ச்லேஷத்திற்கு இசைய மாட்டோம் வித்தகப் பிள்ளாய், Vitthaka pillai - ஆச்சரிய சேஷ்டைகளையுடைய பிள்ளாய்! விரையேல், Viraiyel - அவஸரப் பட வேண்டா அரவில், Aravil - காளிய நாகத்தின் மேல்- குதி கொண்டு, Kudhi kondu - குதித்துக் கொண்டு நடித்தாய், Nadithaai - நர்த்தனஞ்செய்தவனே! குருந்திடைக் கூறை, Kurundhidai koorai - (அக்) குருந்த மரத்தின் மேல் வைத்திருக்கிற சேலைகளை பணியாய், Paniyaai - கொடுத்தருள் |