Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 526 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
526நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 3
எல்லே ஈது என்ன விளமை எம்மனைமார் காணில் ஒட்டார்
பொல்லாங்கு ஈது என்று கருதாய் பூங்குருந்தேறி யிருத்தி
வில்லால் இலங்கை யழித்தாய் நீ வேண்டியது எல்லாம் தருவோம்
பல்லாரும் காணாமே போவோம் பட்டைப் பணித்து அருளாயே
வில்லால், Villaal - வில்லாலே
இலங்கை, Ilangai - லங்கையை
அழித்தாய், Azhithaai - நாசஞ் செய்தருளினவனே!
எல்லே, Elle - என்னே!
ஈது என்ன இளமை, Eethu enna ilamai - இது என்ன பிள்ளைத்தனம்!
எம் அனைமார், Em anaimaar - எங்களுடைய தாய்மார்கள்
காணில், Kaanil - கண்டால்
ஒட்டார், Ottaar - (மறுபடியும் எங்களை வீட்டின் வழி வர) ஒட்டார்கள்
ஈது, Eethu - (நீயொவென்றால்) கண்டாரடங்கலும் ஏசும்படி எங்களை அம்மணமாக்கி நிறுத்தியிருக்கிற இது
பொல்லாங்கு என்று, Pollaangu endru - பொல்லாத காரியமென்று
கருதாய், Karuthaai - நினைக்கிறாயில்லை
பூ குருந்து, Poo kurundhu - புஷ்பித்திரா நின்ற குருந்த மரத்தின் மேல்
ஏறி இருத்தி, Eri iruthi - ஏறி யிரா நின்றாய்
நீ வேண்டியது எல்லாம், Nee vendiyadhu ellaam - நீ அபேஷிக்கு மவற்றை யடங்கலும்
தருவோம், Tharuvom - கொடுக்கிறோம்
பல்லாரும், Pallaarum - (ஊரிலுள்ள) பலரும்
காணோமே, Kaanome - காணாதபடி
போவோம், Povom - போகிறோம்
பட்டை, Pattai - (எங்களுடைய) பட்டுச் சேலைகளை
பணித்தருளாய், Panitharulaai - தந்தருள வேணும்