| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 526 | நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 3 | எல்லே ஈது என்ன விளமை எம்மனைமார் காணில் ஒட்டார் பொல்லாங்கு ஈது என்று கருதாய் பூங்குருந்தேறி யிருத்தி வில்லால் இலங்கை யழித்தாய் நீ வேண்டியது எல்லாம் தருவோம் பல்லாரும் காணாமே போவோம் பட்டைப் பணித்து அருளாயே | வில்லால், Villaal - வில்லாலே இலங்கை, Ilangai - லங்கையை அழித்தாய், Azhithaai - நாசஞ் செய்தருளினவனே! எல்லே, Elle - என்னே! ஈது என்ன இளமை, Eethu enna ilamai - இது என்ன பிள்ளைத்தனம்! எம் அனைமார், Em anaimaar - எங்களுடைய தாய்மார்கள் காணில், Kaanil - கண்டால் ஒட்டார், Ottaar - (மறுபடியும் எங்களை வீட்டின் வழி வர) ஒட்டார்கள் ஈது, Eethu - (நீயொவென்றால்) கண்டாரடங்கலும் ஏசும்படி எங்களை அம்மணமாக்கி நிறுத்தியிருக்கிற இது பொல்லாங்கு என்று, Pollaangu endru - பொல்லாத காரியமென்று கருதாய், Karuthaai - நினைக்கிறாயில்லை பூ குருந்து, Poo kurundhu - புஷ்பித்திரா நின்ற குருந்த மரத்தின் மேல் ஏறி இருத்தி, Eri iruthi - ஏறி யிரா நின்றாய் நீ வேண்டியது எல்லாம், Nee vendiyadhu ellaam - நீ அபேஷிக்கு மவற்றை யடங்கலும் தருவோம், Tharuvom - கொடுக்கிறோம் பல்லாரும், Pallaarum - (ஊரிலுள்ள) பலரும் காணோமே, Kaanome - காணாதபடி போவோம், Povom - போகிறோம் பட்டை, Pattai - (எங்களுடைய) பட்டுச் சேலைகளை பணித்தருளாய், Panitharulaai - தந்தருள வேணும் |