| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 527 | நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 4 | பரக்க விழித்து எங்கும் நோக்கிப் பலர் குடைந்தாடும் சுனையில் அரக்க நில்லாக் கண்ண நீர்கள் அலமருகின்றனவா பாராய் இரக்கமேல் ஒன்றும் இலாதாய் இலங்கை அழித்த பிரானே குரக்கு அரசு ஆவது அறிந்தோம் குருந்திடைக் கூறை பணியாய் | இலங்கை அழித்த பிரானே!, Ilangai azhitha pirane! - இலங்கை அழித்த பிரானே! பலர் குடைந்து ஆடும் சுனையில், Palar kudainthu aadum sunaiyil - பல பெண்கள் படிந்து நீராடும் இப் பொய்கையின் கரையில் கண்ண நீர்கள், Kanna neergal - கண்ணீர்த் தாரைகள் அரக்க நில்லா, Arakka nilla - அடக்கினாலும் நிற்க மாட்டாதவைகளாய் அலமருகின்ற, Alamarugindra - ஆ தளும்புகிறபடியை எங்கும், Engum - நாற் புறத்திலும் பரக்க விழித்து, Parakka vizhithu - நன்றாக விழித்து நோக்கி பாராய், Nokki paaraai - உற்று நோக்கு ஒன்றும் இரக்கம் இலாதாய், Ondrum irakkam ilaadhaai - கொஞ்சங்கூட தயவு இல்லாதவனே! குரங்கு அரசு ஆவது அறிந்தோம், Kurangu arasu aavadhu arindhom - நீ மரமேற வல்லார்க்குள் தலைவன் என்பதை அறிந்து கொண்டோம் குருந்திடை கூறை பணியாய், Kurundhidai koorai paniyaai - (ஆன பின்பு) குருந்தின் மேலுள்ள (எங்கள்) சேலைகளை கொடுத்தருள வேணும் |