திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 527 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
527நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 4
பரக்க விழித்து எங்கும் நோக்கிப் பலர் குடைந்தாடும் சுனையில் அரக்க நில்லாக் கண்ண நீர்கள் அலமருகின்றனவா பாராய் இரக்கமேல் ஒன்றும் இலாதாய் இலங்கை அழித்த பிரானே குரக்கு அரசு ஆவது அறிந்தோம் குருந்திடைக் கூறை பணியாய்
பதவுரை Show / Hide
இலங்கை அழித்த பிரானே!, Ilangai azhitha pirane! - இலங்கை அழித்த பிரானே!
பலர் குடைந்து ஆடும் சுனையில், Palar kudainthu aadum sunaiyil - பல பெண்கள் படிந்து நீராடும் இப் பொய்கையின் கரையில்
கண்ண நீர்கள், Kanna neergal - கண்ணீர்த் தாரைகள்
அரக்க நில்லா, Arakka nilla - அடக்கினாலும் நிற்க மாட்டாதவைகளாய்
அலமருகின்ற, Alamarugindra - ஆ தளும்புகிறபடியை
எங்கும், Engum - நாற் புறத்திலும்
பரக்க விழித்து, Parakka vizhithu - நன்றாக விழித்து
நோக்கி பாராய், Nokki paaraai - உற்று நோக்கு
ஒன்றும் இரக்கம் இலாதாய், Ondrum irakkam ilaadhaai - கொஞ்சங்கூட தயவு இல்லாதவனே!
குரங்கு அரசு ஆவது அறிந்தோம், Kurangu arasu aavadhu arindhom - நீ மரமேற வல்லார்க்குள் தலைவன் என்பதை அறிந்து கொண்டோம்
குருந்திடை கூறை பணியாய், Kurundhidai koorai paniyaai - (ஆன பின்பு) குருந்தின் மேலுள்ள (எங்கள்) சேலைகளை கொடுத்தருள வேணும்