திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 528 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
528நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 5
காலைக் கதுவிடுகின்ற கயலொடு வாளை விரவி வேலைப் பிடித்து என் ஐமார்களோட்டில் என்ன விளையாட்டோ கோலச் சிற்றாடை பலவும் கொண்டு நீ ஏறி இராதே கோலம் கரிய பிரானே குருந்திடைக் கூறை பணியாய்
பதவுரை Show / Hide
கரிய, Kariya - கறுத்த
கோலம், Kolam - திருமேனியை யுடைய
பிரானே, Pirane - கண்ண பிரானே!
கயலொடு, Kayalodu - கயல் மீன்களும்
வாளை, Vaalai - வாளை மீன்களும்
விரவி, Viravi - ஒன்றாய்க் கூடி
காலை, Kaalai - (எமது) கால்களை
கதுவிடுகின்ற, Kadhuviduginra - கடியா நின்றன
என் ஐமார்கள், En aimargal - (இப்படி நீ எங்களை வருத்தப்படுத்துவதைக் கேள்விப்பட்டு) எங்கள் தமையன்மார்கள்
வேலை பிடித்து, Velai pidithu - வேலைப் பிடித்துக் கொண்டு
ஓட்டில், Ottil - உன்னைத் துரத்திவிட்டால்
என்ன விளையாட்டு, Enna vilaiyaattu - (அது பின்னை) என்ன விளையாட்டாய் முடியும்?
நீ, Nee - நீ
கோலம், Kolam - அழகிய
சிற்றாடை பலவும் கொண்டு, Sitraadai palavum kondu - சிற்றாடைகளை யெல்லாம் வாரிக் கொண்டு
ஏறி இராது, Eri iraadhu - (மரத்தின் மேல்) ஏறி யிராமல்
குருந்திடை, Kurundhidai - குருந்த மரத்தின் மேலுள்ள
கூறை, Koorai - (எங்கள்) சேலைகளை
பணியாய், Paniyaai - தந்தருள்