| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 528 | நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 5 | காலைக் கதுவிடுகின்ற கயலொடு வாளை விரவி வேலைப் பிடித்து என் ஐமார்களோட்டில் என்ன விளையாட்டோ கோலச் சிற்றாடை பலவும் கொண்டு நீ ஏறி இராதே கோலம் கரிய பிரானே குருந்திடைக் கூறை பணியாய் | கரிய, Kariya - கறுத்த கோலம், Kolam - திருமேனியை யுடைய பிரானே, Pirane - கண்ண பிரானே! கயலொடு, Kayalodu - கயல் மீன்களும் வாளை, Vaalai - வாளை மீன்களும் விரவி, Viravi - ஒன்றாய்க் கூடி காலை, Kaalai - (எமது) கால்களை கதுவிடுகின்ற, Kadhuviduginra - கடியா நின்றன என் ஐமார்கள், En aimargal - (இப்படி நீ எங்களை வருத்தப்படுத்துவதைக் கேள்விப்பட்டு) எங்கள் தமையன்மார்கள் வேலை பிடித்து, Velai pidithu - வேலைப் பிடித்துக் கொண்டு ஓட்டில், Ottil - உன்னைத் துரத்திவிட்டால் என்ன விளையாட்டு, Enna vilaiyaattu - (அது பின்னை) என்ன விளையாட்டாய் முடியும்? நீ, Nee - நீ கோலம், Kolam - அழகிய சிற்றாடை பலவும் கொண்டு, Sitraadai palavum kondu - சிற்றாடைகளை யெல்லாம் வாரிக் கொண்டு ஏறி இராது, Eri iraadhu - (மரத்தின் மேல்) ஏறி யிராமல் குருந்திடை, Kurundhidai - குருந்த மரத்தின் மேலுள்ள கூறை, Koorai - (எங்கள்) சேலைகளை பணியாய், Paniyaai - தந்தருள் |