| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 529 | நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 6 | தடத்தவிழ் தாமரைப் பொய்கைத் தாள்கள் எம் காலைக் கதுவ விடத்தேள் எறிந்தாலே போலே வேதனை யாற்றவும் பட்டோம் குடத்தை எடுத்து ஏறவிட்டுக் கூத்தாட வல்ல வெங்கோவே படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டைப் பணித்து அருளாயே | தடம், Thadam - விசாலமாயும் அவிழ் தாமரை, Avizh thaamarai - மலர்ந்த தாமரைகளை யுடையவுமான பொய்கை, Poigai - தடாகத்திலே தாள்கள், Thaalgal - தாமரைத் தண்டுகளானவை எம் காலை, Em kaalai - எங்கள் கால்களை கதுவ, Kadhuva - கடிக்க விடம் தேள் எறிந்தால் போல, Vidam thel erindhaal pol - விஷத்தை யுடைய தேள் கொட்டினாற்போலே ஆற்றவும், Aatravum - மிகவும் வேதனை பட்டோம், Vedhanai pattom - வருத்தப் படா நின்றோம் குடத்தை, Kudathai - குடங்களை எடுத்து, Eduthu - தூக்கி ஏற விட்டு, Era vittu - உயர வெறித்து கூத்து ஆட, Koothu aada - (இப்படி) குடக் கூத்தை ஆடுவதற்கு வல்ல, Valla - ஸாமர்த்தியமுள்ள எம் கோவே, Em kove - எம்முடைய தலைவனே! படிற்றை எல்லாம் தவிர்ந்து, Paditrai ellaam thavirndhu - (நீ செய்கிற) தீம்புகளை யெல்லாம் விட்டு எங்கள் பட்டை பணித்தருளாய், Engal pattai pani tharulaayi - சேலைகளை கொடுத்தருள வேணும். |