Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 530 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
530நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 7
நீரிலே நின்று அயர்க்கின்றோம் நீதி யல்லாதன செய்தாய்
ஊரகம் சாலவும் சேய்ததால் ஊழி எல்லாம் உணர்வானே
ஆர்வம் உனக்கே யுடையோம் அம்மனைமார் காணில் ஒட்டார்
போர விடாய் எங்கள் பட்டைப் பூங்குருந்து ஏறி இராதே
ஊழி எல்லாம், Oozhi ellam - கற்பாந்த காலத்திலெல்லாம்
உணர்வானே, Unarvaane - (ஜகத் ரக்ஷண சிந்தையுடன்) உணர்ந்திருப்பவனே!
நீரிலே நின்று அயர்க்கின்றோம், Neerile ninru ayarkinrom - ஜலத்தில் நின்று கொண்டு வருத்தப்படா நின்றோம்
நீதி அல்லாதன, Neethi allaadhana - அநீதியான செயல்களை
ஆல், Aal - ஐயோ! (இப்படி நீ எங்களை வருத்தத் செய்தேயும்)
உனக்கே, Unakke - உன் விஷயத்திலேயே
ஆர்வம் உடையோம், Aarvam udaiyom - நாங்கள் அன்புள்ளவர்களா யிரா நின்றோம்
அம்மனைமார், Ammanaimaar - எங்கள் தாய்மார்
காணில், Kaanil - நீ பண்ணும் லீலைகளுக்கு நாங்கள் இணங்கி நிற்பதைக் கண்டால்
செய்தாய், Seithaai - செய்யா நின்றாய்
ஊர், Oor - (உன் விஷமங்களுக்குத் தப்பி ஓடிப் பிழைக்கப் பார்ப்போமென்றால்) எங்கள் ஊராகிய ஆய்ப் பாடியும்
அகம், Agam - மாளிகைகளும்
சாலவும், Saalavum - மிகவும்
சேய்த்து, Seithu - தூரத்தி லிரா நின்றன
ஒட்டார், Ottaar - இசைய மாட்டார்கள்
எங்கள் பட்டை, Engal pattai - எங்களுடைய சேலைகளை
போர விடாய், Pora vidaai - தந்தருளாய்
பூ குருந்து, Poo kurundhu - பூத்திரா நின்ற குருத்த மரத்தின் மேல்
ஏறி இராதே, Eri iraadhe - ஏறிக் கொண்டு தீமைகளைச் செய்யாதே