| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 530 | நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 7 | நீரிலே நின்று அயர்க்கின்றோம் நீதி யல்லாதன செய்தாய் ஊரகம் சாலவும் சேய்ததால் ஊழி எல்லாம் உணர்வானே ஆர்வம் உனக்கே யுடையோம் அம்மனைமார் காணில் ஒட்டார் போர விடாய் எங்கள் பட்டைப் பூங்குருந்து ஏறி இராதே | ஊழி எல்லாம், Oozhi ellam - கற்பாந்த காலத்திலெல்லாம் உணர்வானே, Unarvaane - (ஜகத் ரக்ஷண சிந்தையுடன்) உணர்ந்திருப்பவனே! நீரிலே நின்று அயர்க்கின்றோம், Neerile ninru ayarkinrom - ஜலத்தில் நின்று கொண்டு வருத்தப்படா நின்றோம் நீதி அல்லாதன, Neethi allaadhana - அநீதியான செயல்களை ஆல், Aal - ஐயோ! (இப்படி நீ எங்களை வருத்தத் செய்தேயும்) உனக்கே, Unakke - உன் விஷயத்திலேயே ஆர்வம் உடையோம், Aarvam udaiyom - நாங்கள் அன்புள்ளவர்களா யிரா நின்றோம் அம்மனைமார், Ammanaimaar - எங்கள் தாய்மார் காணில், Kaanil - நீ பண்ணும் லீலைகளுக்கு நாங்கள் இணங்கி நிற்பதைக் கண்டால் செய்தாய், Seithaai - செய்யா நின்றாய் ஊர், Oor - (உன் விஷமங்களுக்குத் தப்பி ஓடிப் பிழைக்கப் பார்ப்போமென்றால்) எங்கள் ஊராகிய ஆய்ப் பாடியும் அகம், Agam - மாளிகைகளும் சாலவும், Saalavum - மிகவும் சேய்த்து, Seithu - தூரத்தி லிரா நின்றன ஒட்டார், Ottaar - இசைய மாட்டார்கள் எங்கள் பட்டை, Engal pattai - எங்களுடைய சேலைகளை போர விடாய், Pora vidaai - தந்தருளாய் பூ குருந்து, Poo kurundhu - பூத்திரா நின்ற குருத்த மரத்தின் மேல் ஏறி இராதே, Eri iraadhe - ஏறிக் கொண்டு தீமைகளைச் செய்யாதே |