| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 531 | நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 8 | மாமியார் மக்களே யல்லோம் மற்றும் இங்கு எல்லாரும் போந்தார் தூ மலர்க்கண்கள் வளரத் தொல்லை யிராத் துயில்வானே சேமமலேன்றிது சாலச் சிக்கனே நாமிது சொன்னோம் கோமள வாயர் கொழுந்தே குருந்திடைக் கூறை பணியாய் | தொல்லை இரா, Thollai iraa - பழைய ராத்ரிகளில் தூ மலர் கண்கள் வளர, Thoo malar kangal valara - பரிசுத்தமான மலர் போன்ற கண்கன் நித்ரா பரவசமாம்படி துயில்வானே,Thuyilvaane - பள்ளி கொள்பவனே! மாமியார் மக்களே அல்லோம், Maamiyaar makkale allom - (இப் பொய்கைக் கரையிலே நிற்குமவர்கள்) உனக்குத் தேவிமாராகும் முறையிலுள்ளார் மாத்திரமல்லோம் மற்றும் எல்லோரும், Matrum ellorum - மற்றுள்ள மாமிமார், அவர்கள் தாய்மார் முதலியவர்களும் இங்கு, Ingu - இவ் விடத்தில் போந்தார், Pondhaar - வந்திருக்கின்றார்கள் இது, Idhu - நீ செய்கிற இத் தீம்பானது சால, Saala - மிகவும் சேமம் அன்று, Semam andru - தகுதியானதன்று இது, Idhu - இவ் வார்த்தையை நாம், Naam - நாங்கள் சிக்கன, Sikana - திண்ணிதாக சொன்னோம், sonnom - சொல்லுகின்றோம் ஆயர், Aayar - இடையர்களுக்கு கோமளக் கொழுந்தே, Komala kozhundhe - இளங்கொழுந்து போன்றவனே! குருந்திடை கூறை பணியாய், Kurundhidai koorai paniyaai - குருந்தின் மேலுள்ள (எங்கள்) சேலைகளை கொடுத்தருள வேணும். |