Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 531 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
531நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 8
மாமியார் மக்களே யல்லோம் மற்றும் இங்கு எல்லாரும் போந்தார்
தூ மலர்க்கண்கள் வளரத் தொல்லை யிராத் துயில்வானே
சேமமலேன்றிது சாலச் சிக்கனே நாமிது சொன்னோம்
கோமள வாயர் கொழுந்தே குருந்திடைக் கூறை பணியாய்
தொல்லை இரா, Thollai iraa - பழைய ராத்ரிகளில்
தூ மலர் கண்கள் வளர, Thoo malar kangal valara - பரிசுத்தமான மலர் போன்ற கண்கன் நித்ரா பரவசமாம்படி
துயில்வானே,Thuyilvaane - பள்ளி கொள்பவனே!
மாமியார் மக்களே அல்லோம், Maamiyaar makkale allom - (இப் பொய்கைக் கரையிலே நிற்குமவர்கள்) உனக்குத் தேவிமாராகும் முறையிலுள்ளார் மாத்திரமல்லோம்
மற்றும் எல்லோரும், Matrum ellorum - மற்றுள்ள மாமிமார், அவர்கள் தாய்மார் முதலியவர்களும்
இங்கு, Ingu - இவ் விடத்தில்
போந்தார், Pondhaar - வந்திருக்கின்றார்கள்
இது, Idhu - நீ செய்கிற இத் தீம்பானது
சால, Saala - மிகவும்
சேமம் அன்று, Semam andru - தகுதியானதன்று
இது, Idhu - இவ் வார்த்தையை
நாம், Naam - நாங்கள்
சிக்கன, Sikana - திண்ணிதாக
சொன்னோம், sonnom - சொல்லுகின்றோம்
ஆயர், Aayar - இடையர்களுக்கு
கோமளக் கொழுந்தே, Komala kozhundhe - இளங்கொழுந்து போன்றவனே!
குருந்திடை கூறை பணியாய், Kurundhidai koorai paniyaai - குருந்தின் மேலுள்ள (எங்கள்) சேலைகளை கொடுத்தருள வேணும்.