திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 532 | நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 9 | கஞ்சன் வலை வைத்த வன்று காரிருள் எல்லில் பிழைத்து
நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய் நின்ற விக்கன்னியரோமை
அஞ்ச யுரப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டிருக்கும் –
வஞ்சகப் பேய்ச்சி பாலுண்ட மசுமையிலீ கூறை தாராய் | பதவுரை Show / Hideகஞ்சன், Kanjan - கம்ஸனானவன் வலை வைத்த அன்று, Valai vaitha andru - உன்னை அழிப்பதாக நினைத்த காலத்தில் கார் இருள், Kaar irul - மிக்க இருளை யுடையத்தான எல்லில், Ellil - இரவில் பிழைத்து, Pizhaithu - பிழைத்து நின்ற, Nindra - (அம்மணமாக) நிற்கின்ற இக் கன்னிய ரோமை, Ik kanniya romai - இளம் பெண்களான எங்களுக்கு நெஞ்சு துக்கம் செய்ய, Nenju thukkam seiya - மனத் துன்பத்தை உண்டாக்குவதற்காக போந்தாய், Pondhaai - வந்து பிறந்தாய் அசோதை, Asodhai - யசோதைப் பிராட்டியோ வென்றால் அஞ்ச, Anja - நீ பயப்படும்படி உரப்பாள், Urapaal - உன்னை அதட்ட மாட்டாள் ஆணாட விட்டிட்டிருக்கும், Anaada vittitirukkum - தீம்பிலே கை வளரும் படி உன்னை விட்டிரா நின்றாள் வஞ்சகம், Vanjakam - வஞ்சனை யுடைய பேய்ச்சி, Peichchi - பூதனையினுடைய பால், Paal - முலைப் பாலை உண்ட, Unda - (அவளுயிரோடே கூட) உறிஞ்சி யுண்ட மசுமை இலீ, Masumai ilee - லஜ்ஜை யில்லாதவனே! கூறை தாராய், Koorai thaaraai - சேலைகளைத் தந்தருள் |