Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 533 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
533நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 10
கன்னியரோடு எங்கள் நம்பி கரியபிரான் விளையாட்டை
பொன்னிய மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன் பட்டன் கோதை
இன்னிசை யால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய்
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பாரே
எங்கள் நம்பி, Engal nambi - எமக்கு ஸ்வாமியாய்
கரிய, Kariya - கார் கலந்த மேனியனான
பிரான், Piran - கண்ண பிரான்
கன்னிய ரோடு, Kanniyarodu - ஆயர் சிறுமியரோடே செய்த
விளையாட்டை, Vilaiyatai - திவ்ய லீலைகளைக் குறித்து
பொன் இயல், Pon iyal - ஸ்வர்ண மயமான
மாடங்கள் சூழ்ந்த, Maadangal soozhnda - மாடங்களால் சூழப்பட்ட
புதுவையர் கோன், Puthuvaiyar kon - ஸ்ரீவில்லிபுத்தூரி லுள்ளார்க்குத் தலைவரான
பட்டன் கோதை, Pattan kodhai - பெரியாழ்வார்க்குத் திருமகளான ஆண்டாள்
இன் இசையால், In isaiaal - இனிய இசையாலே
சொன்ன, Sonna - அருளிச் செய்த
மாலை, Maalai - சொல் மாலையாகிய
ஈர் ஐந்தும், Eer aindhum - இப் பத்துப் பாட்டுக்களையும்
வல்லவர் தாம், Vallavar thaam - கற்க வல்லவர்கள்
போய், Poi - (அர்ச்சிராதி மார்க்கமாகப்) போய்
வைகுந்தம் புக்கு, Vaigundham pukku - பரம பதத்தை யடைந்து (அவ் விடத்திலே)
மன்னிய, Manniya - நித்ய வாஸம் செய்தருளுகிற
மாதவனோடு, Madhavanodu - திருமாலோடு கூடி
இருப்பார், Irupaar - நித்யா நுபவம் பண்ணிக் கொண்டு வாழ்ந்திருக்கப் பெறுவர்.