| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 534 | நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 1 | தெள்ளியார் பலர் கைந்தொழும் தேவனார் வள்ளல் மாலிரும் சோலை மணாளனார் பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட கொள்ளுமாகில் நீ கூடிடு கூடிலே | கூடலே, Koodale - கூடல் தெய்வமே! தெள்ளியார் பலர், Thelliyar palar - தெளிவுடைய பக்தர்கள் பலர் கை தொழும், Kai thozhum - கைகளார வணங்கப் பெற்ற தேவனார், Thevanaar - ஸ்வாமியாய் வள்ளல், Vallal - பரமோதாரனாய் மாலிருஞ்சோலை மணாளனார், Maalirunjolai manaalanar - திருமாலிருஞ் சோலையிலே எழுந்தருளி யிருக்கிற மணவாளப் பிள்ளையாகிய பரம புருஷன் பள்ளி கொள்ளும் இடத்து, Palli kollum idathu - பள்ளி கொண்டருளுமிடத்திலே அடி கொட்டிட, Adi kottit - (அவனுடைய) திருவடிகளை நான் பிடிக்கும்படியாக கொள்ளும் ஆகில், Kollum aagil - (அவன்) திருவுள்ளம் பற்றுவனாகில் நீ கூடிடு, Nee koodidu - நீ கூட வேணும் |