Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 534 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
534நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 1
தெள்ளியார் பலர் கைந்தொழும் தேவனார்
வள்ளல் மாலிரும் சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடிலே
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
தெள்ளியார் பலர், Thelliyar palar - தெளிவுடைய பக்தர்கள் பலர்
கை தொழும், Kai thozhum - கைகளார வணங்கப் பெற்ற
தேவனார், Thevanaar - ஸ்வாமியாய்
வள்ளல், Vallal - பரமோதாரனாய்
மாலிருஞ்சோலை மணாளனார், Maalirunjolai manaalanar - திருமாலிருஞ் சோலையிலே எழுந்தருளி யிருக்கிற மணவாளப் பிள்ளையாகிய பரம புருஷன்
பள்ளி கொள்ளும் இடத்து, Palli kollum idathu - பள்ளி கொண்டருளுமிடத்திலே
அடி கொட்டிட, Adi kottit - (அவனுடைய) திருவடிகளை நான் பிடிக்கும்படியாக
கொள்ளும் ஆகில், Kollum aagil - (அவன்) திருவுள்ளம் பற்றுவனாகில்
நீ கூடிடு, Nee koodidu - நீ கூட வேணும்