Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 535 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
535நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 2
காட்டில் வேங்கடம் கண்ணபுரநகர்
வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன்
ஓட்டரா வந்து என் கைப்பற்றி தன்னோடும்
கூட்டுமாகில் நீ கூடிடு கூடலே
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
காட்டில் வேங்கடம், Kaatil vengadam - காட்டிலுள்ள திருவேங்கடமலையில
நகர் கண்ணபுரம், Nagar kannapuram - நகரமாகிய திருக்கண்ண புரத்திலும்
வாட்டம் இன்றி, Vaatam indri - மனக் குறை யில்லாமல்
மகிழ்ந்து, Magizhndhu - திருவுள்ளமுகந்து
உறை, Urai - நித்ய வாஸம் செய்தருளுகிற
வாமனன், Vaamanan - வாமநாவதாரம் செய்தருளிய எம்பெருமான்
ஒட்டரா வந்து, Ottaraa vandhu - ஓடி வந்து
என் கை பற்றி, En kai patri - என்னுடைய கையைப் பிடித்து
தன்னொடும், Thanodum - தன்னொடு
கூட்டும் ஆகில், Kootum aagil - அணைத்துக் கொள்வனாகில்
நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும்