திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 536 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
536நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 3
பூ மகன் புகழ் வானவர் போற்றுதற்கு ஆமகன் அணி வாணுதல் தேவகி மாமகன் மிகு சீர் வசுதேவர் தம் கோமகன் வரில் கூடிடு கூடலே
பதவுரை Show / Hide
பூ மகன், Poo magan - பூலிற் பிறந்த பிரமனும்
வானவர், Vaanavar - நித்யஸூரிகளும்
புகழ் போற்றுதற்கு, Pugazh potrudharku - கீர்த்தியைப் பாடித் துதிப்பதற்கு
ஆம், Aam - தகுந்த
மகன், Magan - புருஷோத்தமனாய்,
அணி வாள் நுதல் தேவகி, Ani vaal nuthal Dhevaki - மிகவும் அழகிய நெற்றியையுடைய தேவகியினுடைய
மா மகன், Maa magan - சிறந்த புத்திரனாய்,
மிகு சீர் வசுதேவர் தம், Migu seer Vasudevar tham - மிகுந்த, நற் குணங்களை யுடையரான வசுதேவருடைய
கோ மகன், Ko magan - மாட்சிமை தங்கிய புத்திரனான கண்ணபிரான்
வரில், Varil - (என்னை அணைக்க) வருவானாகில்
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும்