Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 536 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
536நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 3
பூ மகன் புகழ் வானவர் போற்றுதற்கு
ஆமகன் அணி வாணுதல் தேவகி
மாமகன் மிகு சீர் வசுதேவர் தம்
கோமகன் வரில் கூடிடு கூடலே
பூ மகன், Poo magan - பூலிற் பிறந்த பிரமனும்
வானவர், Vaanavar - நித்யஸூரிகளும்
புகழ் போற்றுதற்கு, Pugazh potrudharku - கீர்த்தியைப் பாடித் துதிப்பதற்கு
ஆம், Aam - தகுந்த
மகன், Magan - புருஷோத்தமனாய்,
அணி வாள் நுதல் தேவகி, Ani vaal nuthal Dhevaki - மிகவும் அழகிய நெற்றியையுடைய தேவகியினுடைய
மா மகன், Maa magan - சிறந்த புத்திரனாய்,
மிகு சீர் வசுதேவர் தம், Migu seer Vasudevar tham - மிகுந்த, நற் குணங்களை யுடையரான வசுதேவருடைய
கோ மகன், Ko magan - மாட்சிமை தங்கிய புத்திரனான கண்ணபிரான்
வரில், Varil - (என்னை அணைக்க) வருவானாகில்
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும்