Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 537 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
537நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 4
ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட
பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து
வாய்த்த காளியன் மேல் நடமாடிய
கூத்தனார் வரில் கூடிடு கூடலே
ஆய்ச்சிமார்களும், Aaichimaargalum - இடைச்சிகளும்
ஆயரும், Aayarum - இடையரும்
அஞ்சிட, Anjida - பயப்படும்படியாக
பூத்த நீள் கடம்பு ஏறி, Pootha neel kadambu eri - புஷ்பித்ததாய் உயர்ந்திருந்த கடப்ப மரத்தின் மேல் ஏறி
புக பாய்ந்து, Puga paaindhu - அங்கு நின்றும் எழும்பிக் குதித்து
வாய்த்த காளியன் மேல் நடம் ஆடிய, Vaaitha kaaliyan mel nadam aadiya - பாக்கியசாலியான காளியநாகத்தின் மேல் நாட்ய சாஸ்த்ர நிபுணனான நர்த்தனஞ் செய்த
கூத்தனார் வரில், Koothanaar varil - கண்ணபிரான் வரக்கூடுமாகில்
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும்