திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 538 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
538நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 5
மாட மாளிகை சூழ் மதுரைப் பதி நாடி நந்தெருவின் நடுவே வந்திட்டு ஓடை மா மதயானை யுதைத்தவன் கூடுமாகில் நீ கூடிடு கூடலே
பதவுரை Show / Hide
ஓடை, Odai - நெற்றிப் பட்டத்தை யுடைத்தாய்
மா மதம், Maa madham - மிக்க மதத்தை யுடைத்தான
யானை, Yaanai - (குவலயா பீடமென்னும்) யானையை
உதைத்தவன், Udhaithavan - உதைத்து முடித்த கண்ண பிரான்
மாடம் மாளிகை சூழ் மதுரை பதி, Maadam maaligai soozh mathurai pathi - மாடங்களுடைய மாளிகைகளாலே சூழப்பட்ட மதுரை மாநகரிலே
நாடி, Naadi - (நம் வீட்டைத்) தேடிக் கொண்டு
நம் தெருவின் நடுவே வந்திட்டு, Nam theruvin naduve vandhitu - நம்முடைய வீதியின் நடுவிலே வந்து
கூடும் ஆகில், Koodum aagil - (நம்மோடு) கட்டுவானாகில்
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும்